கிறுக்கல்கள் 4
கத்தி கொண்டு வீசினாலும்
மீண்டும் உன்னை நோக்கி வரும்
இம் மனதினை கேட்டேன் மெல்ல
வெட்கம் இல்லையா என்று
அவரை நேசிக்க மட்டுமே உரைத்தாய்
இன்னும் வெறுக்க நினைய வில்லையே
என்றது ஏளனமாக
உனக்கென எழுதிய கவிதைகள்
தூரமாய் நின்று ஏங்க
பேசி சென்ற சாலைகள்
வஞ்சகமாய் வசை பாட
காதலின் பிரிவை விட - உடன் இருந்த
நட்பின் பிரிவு மன பாரத்தை கூட்ட
இருந்தும் வேண்டுகிறேன்
என்றும் நல்ல சுற்றமும்
உனக்கு பிடித்த நட்பும் சூழ
சுகமாய் வாழ்வாய் நண்பனே
நினைவுகளோடு வாழ பழக்க பட்டவள்
பட்டவள்
இனி நீயும் என் அழகிய நினைவாக..
கடல் தாண்டி கண்ட சொந்தம்
இனி என்றும் கணவாய் போகும் பந்தம்