Author Topic: இழப்பு..  (Read 703 times)

Offline Mr.BeaN

இழப்பு..
« on: August 10, 2024, 03:53:36 PM »
விதி வலியது என வாழும்
மதியிழந்தோர் மத்தியில்
கிடைத்ததே கதி என
நானுமே வாழ்ந்திருக்க
முடிந்த நாட்களை
மெல்லத்தான் பார்க்கிறேன்

இத்தனை வாழ்கையில்
கிடைத்தது பெரிதினும்
இழந்ததை ஒரு கணம்
என் மனம் நினைக்குதே
அப்படி எதனை நான்
இழந்தேன் என்று தான்
சிந்தனை செய்கையில்
உள் மனம் வலிக்குதே

சிறுவனாய் இருக்கையில்
வறுமையின் பிடியினில்
சிக்கி திணரிடும்
சூழலால் விரும்பிடும்
எதுவுமே என் கரம்
வந்ததும் இல்லையே
ஆதலால் விருப்பத்தை
அன்று நான் இழந்தனன்

பதின்ம வயதிலோ
குறும்புடன் நட்பினை
குழைந்து நான் இருந்திட
விரும்பியே நெருங்கினேன்
அந்நிலை கண்ட என்
அன்னையோ தடுத்து என்
எண்ணத்தை மாற்றவே
நட்பினை இழந்தணன்

கல்வியில் சிறந்து நான்
விரும்பிய படிப்பினை
கற்றிட துணிகையில்
கடன் வந்து நெருக்கவே
எந்தையும் என்னிடம்
தன் நிலை கூறியே
தடுத்திட நானுமோ
அவர் குரல் கேட்டிட
செவி தனை நீட்டவே
என் திறன் அவ்விடம்
மூழ்கிட நானுமே
கல்வியை இழந்தனன்

கல்வியை முடித்த பின்
மனம்.கவர் வேலையை
கனவுடன் தேடியே
நானும் தான் திரிகையில்
மீண்டுமே தன்னிலை
கூறி என் வழியதை
தடுத்துதான் நிறுத்திட
ஆசையை இழந்தனன்

எல்லாம் போதுமே
என்றுநான் இறைவனை
தொழுத கணத்தினில்
என் உயிர்க்காதலை
துறக்க நேர்கையில்
வாழ்க்கை அதையுமே
அக்கணம் இழந்தனன்

என் துயர் தீர்த்திட
எதுவுமே இல்லையோ
என்றுமே நினைக்கையில்
ஒன்று தான் தோன்றிட
அன்றுடன் கடவுளை
மறுக்கிற மனிதனாய்
ஆகினேன் நானுமே

இத்தனை இழப்பிலும்
பெருந்துயர் கொண்ட நான்
எந்தன் கொள்கையாய்
ஏற்றிடும் ஒன்றென
விரும்பியே இழந்தது
எந்தன் கோவமே
intha post sutathu ila en manasai thottathu..... bean