மொட்டொன்று மலர்ந்து
பூவாகும் என்று
எல்லோரும் இங்கே
அறிந்த ஒன்று
முள்ளொன்று மலர்ந்து
பூவாக கண்டு
நானுமே இன்று
வியந்ததுண்டு
கண் ரெண்டு கொண்டு
கண்ட ஓர் காட்சி
கனவினை போல
தோன்றிடுதே
பன் ஒன்று கொண்டு
மிதமான ராகம்
எந்தன் நெஞ்சும்
பாடிடுதே
சிறிதாக குறும்பு
செய்தாலும் கூட
பெரிதாகத்தானே
சினுங்குபவள்
மனதாலே குழந்தை
மதியாலே குமரி
என்றே தோன்றிடும்
அணங்கு அவள்
இறைவனை தொழுது
இருகரம் ஏந்தி
இன்னலை தீர்க்க
கோருகிறால்
என் மனம் கொய்த
கண்மணி அவளும்
எனக்கிறை போலே
தோனுகிறால்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசா
நல்மனம் கொண்ட
மடந்தையவள்
இக்கவி எழுத
எனக்குள்ளும் தோன்றும்
உணர்வுக்கும் இங்கே
உடந்தையவள்
இப்பாடு பட்டு
நானெழுதும் கவியோ
நான் கண்ட அவளின்
ஒரு பாதி
என் அன்பு கொண்டு
என் துன்பம் கொன்று
அவளோ நான் காணும்
முழுமதி