Author Topic: தாய்மாமன்  (Read 237 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 947
  • Total likes: 3029
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
தாய்மாமன்
« on: July 22, 2024, 07:58:51 PM »
தொப்பிற்கொடியை
கழட்டிவிட்ட நொடிதனில்
என் வாழ்வில்
கலந்துவிட்ட உறவிது

தாயிற்கு பின்
உனை தாங்க
காத்திருக்கிறது
ஓர் உறவு  என
உணர்த்திய தருணம்
அது போலும்

நற்செய்தி, எச்செய்தி
ஆன போதும் - நாம் சொல்ல
தேடும் ஓர் உறவு இது

தந்தை என்றும்
தங்கை என்றும்
அண்ணன் என்றும்
தம்பி என்றும்
உறவுகள் பல இருக்க
விழாக்களில்
நம் கண் தேடும்
உறவிது

நீ இல்லாமல்
வீட்டில்
ஒரு நிகழ்வும்
நடந்துவிடாது

தாவணி வயதில்
பல இரவுகள்
என் கனவில் வந்து
தூக்கம் தொலைக்க வைத்த
உறவிது

கிண்டல், கேலி ,
சண்டை ,சரண் என
தோழர்கள் போல உறவாடிட
கிடைத்த உறவிது

பொய் காரணங்கள் பல தேடி
தொலைந்திடும் உறவுகளில்
நிழல் போல நம் வாழ்வில்
தொடர்ந்திடும்
உறவிது

பிறந்தநாளில்
நான் வாங்கி வந்த
வரம் நீ

தாயிற்கு நிகரானவன்
என்பதாலேயோ
இந்த உறவிற்கு பெயர்
தாய்மாமன்

இப்படிக்கு
உன் அக்கா பொண்ணு




****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Ishaa

Re: தாய்மாமன்
« Reply #1 on: July 23, 2024, 10:19:50 AM »
Thaimaamanin uravai azhagai inthe kavithaiyil veli paduthi irukinga, Joker.

Thaimaaman aga enakku inthe jenmathil varam kidaikavillai. Naan pennai piranthuvitten.
En thaimaamanum kindal, keli seiyum vayathil enakku amaiyavillai🙈

Athu poga naan chiththi age enakku varam kidaithathu inthe jenmathula.

Akka Pasanga.

Thaaram agamal thaai agi vidden.
Naan chiththi age avangalukku kidaidathu periya vaarama theriyavillai. Enakku avanga naan petredhhukamal kidaitha 6 devathaigal.❤️🥰
« Last Edit: July 23, 2024, 11:16:50 AM by Ishaa »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 947
  • Total likes: 3029
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: தாய்மாமன்
« Reply #2 on: July 24, 2024, 12:24:56 PM »
ஒவ்வொருத்தருக்கும்
ஒவ்வொரு உறவு
வரமாக அமையும்


ஒரு சகோதரி எழுத சொல்லி சொன்னாங்க
அவங்க தாய்மாமன் பத்தி அவங்க அவரை தான்
கல்யாணம் பண்ணிகிட்டாங்க
அதை வைத்து கிறுக்கினது

நல்லா இருக்குனு சொன்னதுக்கு நன்றி isha

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "