கை கொடுக்கும் கை: கை கொடுக்கும் கை நம்பிக்கை...
ஆம், கரடு முரடான பாதைகளை கடக்க
நம்பிக்கை மட்டுமே நமக்கு கை கொடுக்கும்...
நான் வீழ்வேன் என்று பலரும் நினைத்ததுண்டு - இருப்பினும்
என்னை துவண்டு போக விடாமல்
என்னுள் மன உறுதி புகட்டி
எம் பாதையில் தாங்கி பிடித்து
எம்மை மேலுயர்த்தும் கையே அந்நம்பிக்கை....
மஹாபாரத போரின் போது
பார்த்தனுக்கு சாரதியாக இருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
உபதேசம் செய்த ஒவ்வொரு வரிகளும்
அவனுக்கு ஓர் நம்பிக்கை... 🙏
எதிரிகளால், கிருஷ்ண தேவராயரின்
வீழிச்சி உருவாகும் தருவாயில் - அவனுக்கு
சானக்கியன் என்ற மாமந்திரியின் தந்திரம்
கை கொடுத்து தூக்கியது... 🙏 அதுவே, ஓர் நம்பிக்கை...!
வாழும் காலங்களில்
நீ வீழ்வாய் வீழ்வாய் என்று உலகம் கூறினாலும்
அதையெல்லாம் மீறி
மனம் தளறாமல் முந்தி வந்து
நம் உந்து சக்தியை உபயோகித்து
நாம் முன்னேறி சென்றால்
நமக்கு பரிசிலாக ஓர் கை
நம் முன்னே பிம்பமாகுவோ, மனிதராகவோ, ஓர் பொருளாகவோ
நம்மை நம் வெற்றி எனும் பாதையில் உயர்த்தி தூக்கி
நம்மை இவ்வுலகில் மிளரச்செய்யும்....!❤
அவ்வளவு, ஏன்
ஓர் பொதுப்படையான எடுத்துக்காட்டு
இப்புகைப்படம் பார்க்கையிலே
நம் கண்ணுக்கு முன் ஓடும் (2024 ஜூன் 29) ஓர் பொன்னாள்
நமது இந்திய மட்டைப்பந்து அணி
உலக கோப்பையை வென்றது .
இதில் கை கொடுத்தது யாரென்றால்
நம்மணியின் பயிற்சியாளர், தலைவர், பந்து வீச்சாளர் மட்டுமின்றி
தன் ஒட்டு மொத்த உழைப்பையும் கொடுத்து
ஒற்றை கையால் Catch பிடித்த அவ்வீரரும் ஆவர்....
🥰 நம்பிக்கை இருந்ததால் மட்டுமே
(17 வருடங்களுக்கு பிறகும்) நம்மால் இவ்வுககத்தை ஜெயிக்க முடிந்தது...
நம்மை உயற்ற
நம்முள் இருக்கும் உந்து சக்தியும்
நம்மை தூக்கி விடும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால்
எவ்வொரு காரியத்திலும்
நாம் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது...!
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)
(திருக்குறள்)
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)
---------------------------------------------------------------------------------------------
இவ்வாய்ப்பைளித்த, அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏