Author Topic: யாரோ நீ..  (Read 746 times)

Offline Mr.BeaN

யாரோ நீ..
« on: December 14, 2023, 04:02:29 PM »
அத்தை மகளோ மாமன் மகளோ
எத்தகையவளோ என்ன உறவோ

இத்தனை நாளாய் எங்கிருந்தாளோ
எந்தன் மனதை கொய்ய வந்தாளோ

சித்தனை போலே இருந்தவன் என்னை
பித்தனை போல ஆக்க வந்தாளோ

கத்தி போல பார்வையில் நெஞ்சை
குத்தி கிழிக்க வந்தவள் அவளோ

மென்மை எனும் பெண்மையை கொண்டு
வன்மையை அவளின் சொல்தனில் கொண்டு

துச்சமாய் எந்தன் காதலை என்னி
எச்சமாய் என்னை வீசிய கன்னி


காதலின் உணர்விலே நானும் பணிந்து
புத்தியில் உன்னை ஏற்றிட துணிந்து

சக்தியெல்லாம் திரட்டி காதலை சொல்ல
காத்திருப்பேன் நான் உன் மனம் வெல்ல..
intha post sutathu ila en manasai thottathu..... bean