சில நினைவுகள்
எப்போதும் அப்படித்தான்
நாம் மறக்க
முயலும் போதெல்லாம்,
யாரோ ஒருவர்
அதை நமக்கு
நினைவுபடுத்திக் கொண்டே இருப்பர்
நாம் மறக்க
முயலும் நினைவுகள்தான்
இருளில் பிரகாசமாக
நட்சத்திரங்களாய்
ஒளிர்கின்றனவோ !?
சில நினைவுகள்
வெளிப்படும்போது -அது
நம் மனதில் பாரமாகலாம் -அது
நம் மனதை மிகவும்
வருத்தப்படுத்தலாம்,
ஆனால்
அந்த நினைவுகளின்
துணையின்றி நம்மால்
வாழ்க்கையை நடத்த முடியாது.
நம்மை நேசிக்க
ஆயிரம் இதயங்கள் இருந்தாலும்,
நாம் விரும்பும் இதயத்திலிருந்து வரும்
அன்பு மட்டுமே
நம்மை முழுமையாக
மகிழ்ச்சியடையச் செய்யும்
பாதையில் நடக்கையில்
தெரியும் ஓர் குழந்தையின்
சிரிப்பு நமக்குள் கடத்தும்
ஓர் சிறு மகிழ்ச்சி
நம் அந்நேரத்து மனபிரச்னைகளை
புறந்தள்ளிவிட போதுமானதாகிறது
மாறாத
சுவற்றில்
ஆண்டுதோறும் மாறிக்கொண்டிருக்கும்
காலண்டர் போல தான்
மாறாத மாயாத
உன் நினைவுகளில்
ஒவ்வொருநாளும்
உருண்டோடிக்கொண்டிருக்கிறது
மழை பெய்து முடிந்து
நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
அதுபோல தான் உன்நினைவுகளும்
என் மனதில்
ஓடிக்கொண்டிருக்கும்
கடைசி மூச்சு வரை
****JOKER****