Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 72766 times)

Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #225 on: July 18, 2025, 03:16:49 PM »
குறள் 225

அதிகாரம்    - ஈகை



ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.



பொருள்
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #226 on: August 01, 2025, 04:05:49 PM »
குறள்  - 226


அதிகாரம்    ஈகை

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி


பொருள்
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.


Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #227 on: August 20, 2025, 03:13:15 PM »
குறள் - 227

அதிகாரம்         ஈகை

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.



பொருள்
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #228 on: August 22, 2025, 04:35:09 PM »
குறள்  - 228


அதிகாரம்   ஈகை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.


பொருள்
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.


Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #229 on: August 23, 2025, 03:00:30 PM »
குறள்- 229

அதிகாரம்    ஈகை

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

பொருள்
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.


Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #230 on: August 25, 2025, 04:04:27 PM »
குறள்  - 230

அதிகாரம்    ஈகை


சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.


பொருள்
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #231 on: September 03, 2025, 04:17:11 PM »
குறள் -231


அதிகாரம்    புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு


பொருள்
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #232 on: September 09, 2025, 04:49:15 PM »
குறள்  :-- 232

அதிகாரம்    புகழ்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.


பொருள்
போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.


Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #233 on: September 18, 2025, 03:28:54 PM »
குறள்  - 233


அதிகாரம்    புகழ்


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.



பொருள்
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #234 on: September 25, 2025, 03:13:55 PM »
குறள் - 234
அதிகாரம்     புகழ்

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

பொருள்
இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #235 on: September 29, 2025, 04:21:38 PM »
குறள்  - 235

அதிகாரம்    புகழ்

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.


பொருள்
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.


Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #236 on: October 03, 2025, 03:56:40 PM »
குறள்  - 236


அதிகாரம்    புகழ்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

பொருள்
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

Online RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #237 on: October 31, 2025, 03:29:00 PM »


குறள்   -  237

அதிகாரம் : புகழ்

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

பொருள்
நல்ல பெயரைப் பெறாமல் வாழாதவர்கள், தங்களை ஏளனம் செய்பவர்களைக் கண்டு வருந்துவது எதற்கு? இது ஒரு வீண் வருத்தமே ஆகும்.