Author Topic: யாரோ  (Read 1163 times)

யாரோ
« on: October 26, 2021, 12:34:01 PM »
யாரோவாக வாழ்வெதென்பது
ஆரம்பத்தில் இருட்டில்
நடப்பது போலத்தான்
கொஞ்சம் கலக்கமாயிருக்கும்
வெளிச்சம் பயின்ற விழிகள்
இருள் கண்டு மிரளும்
விழிகள் என்பதே காட்சிகளைக்
காணும் கருவிதானே..
இருளில் எதற்கு விழிகள்
என்ற உண்மை செவுட்டில் அறையும் போது
இருள் நிஜமான
வெளிச்சமாய் மாறும்...

இருள்தான் சுதந்திரம்
கருமைதான் பொருளற்றது
யாதுமற்றதுதான்
யாரோவாக ஆகமுடியும்
நானும் கூட யாரோதான்....

பிழைகளோடு ஆனவன்...