என் உயிரானவன் நீ
என் உயிரோடு கலந்தவன் நீ
என் உயிரான உயிரான உயிரானவன் நீ
உலகமெல்லாம் மறக்குதடா
உன் பெயரை உச்சரிக்கையில்
உணர்வு எல்லாம் இனிக்குதடா
உன் அன்பை ருசிகையில்
உன் வார்த்தை எனக்கு உணவாகும்
உடலுக்கு மருந்தாகும்
இரவும் பகலும் உன்னையே தியானிக்கிறேன்
இடை விடாமல் நேசிக்கிறேன்