Author Topic: பூக்குட்டி இவள் பூக்கள் எல்லாம்  (Read 1229 times)

Offline சிற்பி

வார்த்தைகள் யாவும்
உயிராகிறது உனை
எழுதும் போது
உனக்காக எழுதும் போது
இந்த வரிகள் யாவும்
கவிதை இல்லை
நீ தான் இந்த உலகின் கவிதை

நிலவுகள் இல்லாமலும்
இரவுகள் இங்கே
இருந்த போதிலும்
உனை நினைவுகள்
இல்லாமல் என்
விடியலல்கள் இல்லையடி

தென்றல் மோதி பூக்கள்
அழுவதில்லை
உன் நினைவுகள் மோதி
இரவெல்லாம் உறக்கமில்லை

மௌனமாக ஒரு நொடியும்
எனை விட்டு போகாதே
அந்த நொடி பொழுதில்
ஓராயிரம் கண்ணீர்
துளி துளியாய்
அவை பேசும்

அழகே
உனக்காக என் வாழ்க்கை
என்று நான் நினைத்தேன்
அந்த தருணத்தில்
இருந்து தான்
என்னையே எனக்கு
பிடித்தது.....

புரிந்து கொள்ளும்
வரையிலும் எதையும்
ரசிக்க முடியாது புரிந்தால்
அதையே நேசிப்போம்

உனக்குள் உறைந்து
உலகையே நான் மறக்க
வேண்டும்..

உன்னோடு கொஞ்சம்
பேசி உனதன்பை
கெஞ்சி யாசிக்க
வேண்டும்

பூக்கள் எல்லாம் உன்
போல் அழகில்லை
பூங்காற்றில் உன் போல
சுகமில்லை....

நீ இல்லாமல்
எப்போதும் நானில்லை...
...... சிற்பி....


« Last Edit: November 28, 2019, 07:17:29 PM by சிற்பி »
❤சிற்பி❤