Author Topic: இறுதியாய் சொல்கிறேன்....  (Read 802 times)

Offline இளஞ்செழியன்



உண்மையை மட்டுமே
உணவாய்க் கேட்கிறதென்ற
உயரமான குற்றாச்சாட்டோடு
எல்லோரும் பழக்க மறுத்த
அன்பெனும் மிருகத்தை
நீ உன் எளிய கைகளின்
சிறிய அசைவேவல்களுக்குள்
கட்டுப்படுத்தலாமென்ற
பேராசையோடு முன்வருகிறாய்

ஆரம்பத்தில் நீ காட்டும்
அக்கறைப் பார்வைகளையும்
புன்னகைச் சொற்களையுமேற்று
சற்றே உன் மனமகுடிக்கு
மயங்கிவிட்டதைப் போலவும்
பணிந்துவிட்டதைப் போலவும்
நடிக்கவும் செய்யுமந்த
நவரசமறிந்த நயவஞ்சக மிருகம்

பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்
கைக்கடங்காமல் முரண்டு பிடிக்கும்
வாய்க்கடங்காமல் பொய்கள் பல பேசும்
பொறுப்பேற்ற உன்னையே
வெறுப்பேற்றும் காரிய வினைகள் செய்யும்
வேண்டமென்று பாதியிலுதறினாலும்
விலகமனமில்லையென்று கலகம் செய்யும்

உறக்கங்கள் பறிக்க
இரவுகளை இரையாக்கும்
உயரங்கள் பறக்க
துயரங்களைக் துணைக்கேகும்   
கனவுகள் பூக்க
கானல்களை நீராக்கும்
நினைவுகளில் அழுந்த
நிஜங்களை நிலைமாற்றும்

எதற்கிந்த ஏமாற்று வேலையென்று
எதிர்த்து நீ பேசிவிட்டால்
ஏமாற ஆளிருந்தால்
ஏமாற்றங்கள் புதிதில்லையென்று
எதிர்த்தர்க்கம் பேசுமந்த
எஜமானுக்கஞ்சா மிருகம்

நம்பிக்கையாய் வாங்கிவந்து
நாளெல்லாம் காத்து வளர்த்தும்
நல்லபுத்தி கிட்டலையென்று
நல்ல நாளில் அழுவாய்
கடைசியாகச் சொல்கிறேன்
கண்திருப்பாமல் கடந்துவிடு/color]
பிழைகளோடு ஆனவன்...