எங்கோ கூவும்
குயிலின் கீதத்தில் ...
உயிர்த்து எழுகிறது உன் நினைவுகள் !
நீண்டு விட்ட ரயிலின் கூக்குரலில் ..
ஒரு வினாடி நின்று துடித்தது இதயம் !
என் உறக்கங்களை உண்டு விட்டு . ...
சலனமில்லாமல் உறங்குகிறாய் நீ!
கண்களின் இமைகளில் ..
கனவுகளின் பாரம் தாங்காமல் ...
கண்ணீர் துளிகள் கசிகின்றன !
சிந்தனையை களவாடிய நீ...
சிறிதும் கலங்காமல் சிரிக்கிறாய் !
சிறைகள் தான் சாஸ்வதம் என்றால்...
சிறகுகள் ஏன் தந்தாய் !
நீ இல்லாத இடம் தேடி பார்க்கிறேன் !
அங்கே போய் மறைந்து கொள்ள ...
தேடும் போது மறைந்து ...
தேடாத போது ..கண்ணில் வந்து ..
கண்ணாமூச்சி ஆடுகிறாய் !