Author Topic: இன்று என் நாள்...  (Read 13435 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: இன்று என் நாள்...
« Reply #15 on: April 06, 2012, 05:36:23 AM »
இனிமை என்பதும் இன்பம் என்பதும்
இருக்கின்ற இடத்தை பொருத்தது இல்லை
இதயத்தை பொருத்தது !

நன்றிகள் இரவிற்கா  ???  இறைவனுக்கா  ???

உன்னை நீயே  புரிந்து  கொள்ளவும் , உண்மை  எது ,
பொய்  எது என்று  அறிந்து  கொள்ள  குறைந்த  நேரம்  எடுத்துகொண்டு
இரவில்  இன்பமாய்  இளைப்பாற  பழகு  !
இரவில் பெரும்பான்மை  ஜீவராசிகள்  புரிவது  இதுவே  !
« Last Edit: April 06, 2012, 06:50:32 PM by aasaiajiith »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்று என் நாள்...
« Reply #16 on: April 06, 2012, 05:21:18 PM »
அலுவல் அதிகமாகி
அலுப்பை தர
முடித்தே ஆகவேண்டும்
என்ற சூழலில்
அலுவல் கழுத்தை நெரிக்க
மணித்துளிகள் இதயத்துடிப்பை
அதிகரிக்க ...
கை வலியில் கைகள் கடுக்க
கவலையில் மனம் அலைய
நான் மட்டும் அவதியாய்
பணி தொடர
நேரம் பத்தை  நெருங்க
பதட்டம் மேலும் அதிகரிக்க
ஒருவழியாய் பணி முடிக்க
அலுவலகமே காலி ஆக
இருட்டு வேளையில்
தனியே இருந்த போதும்
கவலை இல்லாமல்
வண்டியை நோக்கி சென்று
வீட்டுக்கு போக தயாராகி
வண்டியை முன்னோக்கி செலுத்தி
கவலைகளை பின்னோக்கி நினைவாக
நெஞ்சில் கொண்டு
ஏதோ ஒரு நினைவில்
திருவிழா கூட்டத்தில்
நடுவே மாட்டிக்கொள்ள
சாலை மறித்து மேடையிட்டு
கோவில் இசை நிகழ்ச்சியில்
தண்ணி அடித்த இளசுகளின்
நடுவே நான் மாட்டிக்கொள்ள
மிருகங்கள் என் ஆடையை பிடித்து இழுக்க
ஒரு கணம் செய்வதறியாது
மனம் கலங்கி கூட்டத்தில் தொலைந்த
குழந்தையாய் வெறித்து பார்த்து முழிக்க
எங்கிருந்தோ ஒரு ஜீவன்
என்னை காக்க
மறித்து வாய்த்த சாலையை கடக்க முடியாமல்
நான் அதிர்ச்சியில் உறைய..
தம்பி ஒரு உதவி செய்வியா என்று
ஒரு நல்ல ஜீவனை அழைக்க
என் வாகனத்தையும் என்னையும்
பத்திரமாக அழைத்து வந்து
வழி அனுப்ப
முதல் முறையாய் ஏதோ ஒரு நடுக்கம்
மனதுள்...
« Last Edit: April 06, 2012, 05:34:03 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: இன்று என் நாள்...
« Reply #17 on: April 06, 2012, 10:26:31 PM »
இக்கால நிகழ்வை படம் பிடித்து காட்டியது போல் உணர்வு.

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்று என் நாள்...
« Reply #18 on: April 10, 2012, 09:03:08 PM »
நிகழ்வு நிஜமாய் நடந்தது அண்ணா ....இது எனக்கு ஏற்பட்ட நிகழ்வு தான்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: இன்று என் நாள்...
« Reply #19 on: April 11, 2012, 08:25:23 AM »
sry da.. dont worry about that
athellam ketta vishayama ninachi maranthudu......

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: இன்று என் நாள்...
« Reply #20 on: April 11, 2012, 10:20:35 AM »
உணர்ச்சிகளை கட்டுக்குள்  வை  நண்பா !

உணர்ச்சி  மிகுதியில்  கெட்ட விஷயமா ( அது கெட்ட விஷயம் தான்  ) என்று  சொல்லிருக்கே ...
கெட்ட  கனவா  என  சொல்ல  வந்திருப்பியோ  என்னவோ  ???


« Last Edit: April 11, 2012, 07:38:08 PM by aasaiajiith »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: இன்று என் நாள்...
« Reply #21 on: April 11, 2012, 07:33:17 PM »
அதேதான் நன்பா கொஞ்சம் உணர்ச்சி வசபட்டுட்டன்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்று என் நாள்...
« Reply #22 on: April 13, 2012, 08:45:52 PM »
இரண்டு நாட்கள் விடுமுறை
சந்தோஷத்தில் மனம் துள்ள
நிம்மதியாய் என் நாட்கள் நகர
சட்டேன்று முடிந்துவிட்டதே
என் சந்தோசம்...
நாளை திரும்பவும்
அலுவல் என்ற
அல்லலில் திரும்பவும்
மாட்டிக்கொள்ள
இயந்திர வாழ்க்கைக்கு
தயாராக போகும்
மனதை சற்றே
ஆசுவாச படுத்திக்கொள்ள
ஆயத்தமாகிவிட்டேன்..

« Last Edit: April 13, 2012, 11:45:03 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: இன்று என் நாள்...
« Reply #23 on: April 13, 2012, 11:01:45 PM »
இங்கே  என்னை  கவர்ந்த  ஒரு  வாழ்க்கை  தத்துவத்தின்
தழுவலை  நழுவவிடாமல்  தழுவிக்கொள்கிறேன்

"இனிமை " என்பதும்  "இன்பம் " என்பதும்
 இருக்கின்ற  இடத்தினை  பொருத்தது  இல்லை
இதயத்தை  பொருத்தது  !

வாழ்க்கை  அது  இயந்திரத்தனம்  ஆனதனால்  தானோ  ??

ஆசுவாச  படுத்திக்கொள்ளவும்  ஆயுதம்
வாங்கி  தாங்க   போகின்றாய்  ??

« Last Edit: April 14, 2012, 06:16:18 PM by aasaiajiith »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: இன்று என் நாள்...
« Reply #24 on: April 14, 2012, 04:21:51 AM »
அல்லலுர கூடாதென
அலுவலகம் சென்றவளின்
அலுப்பை குறைக்க
அடுத்தடுத்த நாளை
விடுப்பாக அளித்தால்
விடுப்பு முடிந்தும்
விடுப்பிலிருந்து வெளியேற மனமின்றி
கடுப்பில் இருப்பவளே மீண்டும்
அடுப்பூத விருப்பமோ...?

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்று என் நாள்...
« Reply #25 on: April 15, 2012, 08:13:40 PM »
விடுமுறை முடித்து
அலுவல் செல்ல
புதிதாய் ஏதும்
புதுமையாய் இல்லாமல்
எப்பவும்  போலவே
அலுவலை ஆரம்பிக்க
அன்புத்தோழியின் அழைப்பில்
ஆனந்தமாய் அளவளாவ
தோழமையை இருந்த தோழன்
இல்லாத காரணத்தால்
பேசாமல் இருந்து இடைவெளி
அதிகமாகி.
நேருக்கு நேர் பார்த்துக்கொண்டாலும்
சிறு புன்னகையை கூட உதிர்க்க
ஏனோ என் மனம் இடம் கொடுக்காமல்
பார்த்தும் பாராமல் இருக்க
பழகி கொண்டேன்...
துரோகத்தைக் காட்டிலும் கொடுமை
நட்பில் பிரிவு...
உள் ஒன்று வைத்து புறம் பேசும்
மானிடர்களின் மனதை பயிலும்
காலம் போலும்... ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இன்று என் நாள்...
« Reply #26 on: April 23, 2012, 09:01:05 PM »
காலை முதலே சோகம் குடிக்கொள்ள
வழக்கமான சந்தோசம் வராது போக
மனதில் பல சிந்தனைகளோடு
அலுவலகம் நோக்கி
சிந்தை பயணிக்க
பயணத்தின் போது
சந்தோஷமாய் அலைபேசியில்
பேசும் நினைவும் மறந்து போக
ஏதோ ஒரு நினைவில்
கண்கள் கலங்க
துக்கத்தோடு அலுவலகம் சென்று
எதிலும் ஈடுபாடு இல்லாமல்
என் அலுவலை ஆரம்பிக்க
சட்டேன்று மனம்
வேலையைவிட்டு சென்று விடு
என்று நினைத்த நொடியில்
கரங்கள் கடிதத்தை
எழுதிட
என் மேலதிகாரியின் இருக்கையை நோக்கி
நகர்ந்து கடிதத்தை தந்துவிட்டு
திரும்பி என் இருக்கையை பார்க்க
தேம்பி அழுதேவிட்டேன்...
நான் நேசிக்கும் வேலை
நேசிக்கும் அலுவலகம்
நேசிக்கும் நட்புகள்
இவர்கள் இல்லாமல் இனி நானா?? :'( :'( :'(




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: இன்று என் நாள்...
« Reply #27 on: April 24, 2012, 12:03:03 AM »
காரணத்தையே கூறிடாமல் செய்த
காரியத்தை மட்டும் கூறுகிறாய்

காரணமே அப்படி ஏதும் இருந்தாலும்
அது, தேரா காரணமாய் ஈறாது.

மாறாது ,ஒப்புக்கொள்கிறேன் உன் நிலை
படு மோசமான நிலைதான் என்பதை ...

அப்படியே, விட்டுப்ப் போக வேண்டும்
என்ற இக்கட்டான கடும் சமயமெனில்
வருத்தபடவேண்டியது நீ மட்டும் அன்று

உன் அலுவலக மேஜைகள் , நாற்காலிகள் .
குளிரூட்டிய குளிசாதன பெட்டி .
நீ தொட்டு பயன்படுத்திய தொலைபேசி .
உன் பட்டுப்பாதம் பட்டுப்பட்டு பதிந்து போன
உன் அலுவலக மின் தூக்கி (லிப்ட்).
உன் இரு சக்கர வாகனம் நிறுத்தா
வாசல் வழியில் இருக்கும் அவ்வாகன நிறுத்தம் .

மதிய வேளையில், உணவு இடைவேளையில்
உன் சக ஊழியரோடு அரட்டையில் நீ அடிக்கும்
ஒவ்வொரு நகைச்சுவை துணுக்குகளையும்
ஒருமுறையும் கேட்காத எனையே இப்படி வருத்துகிறதே  ?
நிதமும் அதை கேட்டு, ரசித்து, சிரித்து ஆயுள்கூடிய
அந்த  உணவு கூடத்தின் நிலை என்ன ?

அன்றாடம் நீ சுமந்து சென்ற கோப்புகள் ,
அழகாய் , மிக அழகாய் நித்தம் நீ குடிக்க ,
தேநீரும், தண்ணீரும் உனக்காய் சுமந்த கோப்பைகள் 
இவை அனைத்தயும் விட, தன் வருகையின்
அர்த்தத்தை அர்த்தப்பட்டு ,அர்த்தப்படுத்தும் ,
ஒவ்வொரு நாளும் உன் வருகையை பதிவு செய்யும்
வருகை பதிவேடு ,
இப்படி ஒவ்வொன்றும்
தன் உயர்  பங்கிற்கு வருந்துமே ?
இதற்கென்ன பதில் சொல்ல போகிறாய் ??

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: இன்று என் நாள்...
« Reply #28 on: April 25, 2012, 07:36:33 AM »
இரன்டொரு மாத காலமாக
இதே நிலையில் இருந்தவனை
விடுங்கள் அன்னா
நடப்பது நன்மைக்கே என
என்னை தேற்றியவளுக்கும்
இக்கட்டான நிலையா...?
வருந்தாதே தங்கையே, எதற்க்கும் கலங்காதே
இக்கட்டிலிருந்து மீளூம்
கண்கட்டி வித்தை
எதுவென கன்டறி
மனதை அதில் செலுத்து
உதாசீணபடுத்தியவர்கள் நம்மை
புரிந்து கொள்ளும் நிலை வரும்...
காத்திருப்போம்.

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இன்று என் நாள்...
« Reply #29 on: April 29, 2012, 12:38:31 AM »

சந்தோசம் இன்று மனதை குடிகொள்ள
தூக்கம் வராது
கவிதையில் மனம் அலைபாய
நள்ளிரவில் ஒரு கவிதை
ஓயாமல் பேசுபவள் தான்
இன்றும் ஓயாமல் பேசி வருகிறேன்
இணைய வானொலியில்

புரியாமல் செய்த நிகழ்ச்சி
புரிந்து செய்த பின் மனதில்
மகிழ்ச்சி...
பாராட்டுகள் ஒவ்வொன்றும்
முயற்சிக்கு ஏணிப்படிகள்
ஏளனமாய் சிலர் குறை கூறினாலும்
சிலரின் பாராட்டில் குறை மறைந்து
நிறைவாகி போகின்றது..
தமிழை வரமாக பெற்று
கவிபாட திறம் தந்த
இறைவனுக்கு நன்றிகள் கோடி ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்