Author Topic: தோல் நோயை போக்கும் செம்பருத்தி ஆயுர்வேதிக் தைலம்‌ செய்முறையும்‌:  (Read 605 times)

Offline Evil

தோல் நோயை போக்கும் செம்பருத்தி ஆயுர்வேதிக் தைலம்‌ செய்முறையும்‌:

1.செம்பருத்தி இலை - 200 கிராம்‌
2.கீழாநெல்லி - 200 கிராம்
3.வில்வ இலை - 200 கிராம்
4.விருட்சிப்பூ - 200 கிராம்
5.அருகம்புல்‌ - 200 கிராம்
6.வெற்றிலை - 200 கிராம்
7.துளசி இலை - 200 கிராம்
8.ஜாதிமல்லி இலை - 200 கிராம்
9.அவுரி இலை - 200 கிராம்

இவற்றை நன்கு இடித்துப்‌ பிழிந்தெடுத்த சாற்றுடன்‌ தேங்காய்‌ எண்ணெய்‌ 800 கிராம்‌, தேங்காய்ப்‌ பால்‌ 800 கிராம்‌, நன்கு விழுதாக அரைத்த

10. அதிமதுரம்‌ - 33 கிராம்‌
11. சீரகம்‌ - ஜீரக - 33 கிராம்
12. கருஞ்சீரகம்‌ - 33 கிராம்

ஆகியவற்றையும்‌ சேர்த்துக்‌ கலந்து காய்ச்சிப்‌ பதத்தில்‌ வடிகட்டவும்‌.

பயன்படுத்தும்‌ முறை:

மேற்பூச்சாக வெளி உபயோகத்திற்கு மட்டும்‌.

தீரும்‌ நோய்கள்‌ :

1.சிரங்கு.
2.அரிப்பு.
3. கரப்பான்‌.
போன்ற தோல்‌ நோய்கள்‌ முக்கியமாக
குழந்தைகளின்‌ மேற்கூறிய நிலைகளில்‌ மிகச்‌ சிறந்தது. தலைப்‌ பொடுகுக்கு இதனைப்‌ பயன்படுத்துவதுண்டு.

*குறிப்பு :
தெரிந்து கொள்ள வேண்டியவை

1. ஆயுர்வேதத்தில்‌ செய்யபடும்‌ இந்த செம்பருத்தி தைலமும்‌ -சித்த
முறைப்படி செய்யப்படும்‌ செம்பருத்தி தைலமும்‌ ஒன்றல்ல

2. பொடுகுக்கு -துர்துற பத்ராதி தைலம்‌ * வெட்பாலை தைலம்‌ * இந்த
தைலம்‌ தேய்க்க நல்ல பலன்‌ கிடைக்கும்‌

3. இந்த தைலம்‌ -தோல்‌ வியாதிகளிலும்‌ நல்ல பலன்‌ தரும்‌.


உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால