Author Topic: உதிரும் தனிமை  (Read 1296 times)

Offline Guest

உதிரும் தனிமை
« on: December 28, 2018, 04:23:17 AM »





எனது அறையில் உறைந்து
உதிர்கின்றது தனிமை - என்னில்
ஆட்கொண்டுள்ளது ஏகாந்தம்
சில பல பொருட்படாத
சப்தங்களின் பிரதிபலிப்பும்.......

அவ்வப்போது திறந்து மூடும்
ஒற்றைக்கதவினூடே வெறுப்புகள்
தாங்கிய ஒரு கவளம் சோறும்
சூரியக்கதிர்களின் எரிச்சலூட்டும்
வெளிச்சமும்.....

என் மனப்பிறழ்சியில்
உறவுகளை இழந்தது நான்
மட்டுமல்ல என் அறையும்தான்
நான் பிரவேசித்தபின் என்
அறையில் மனிதர்கள்
வருவதில்லை......

ஜன்னல் கதவுகளை யார்
மூடினார் என தெரியவில்லை
திறக்கமுடியா வண்ணம்
வலைகளை கட்டியுள்ளன சிலந்திகள்
மனம்பிறழ்ந்தவனாயினும்
நான் கலைக்கமாட்டேன் எனும்
நம்பிக்கை சிலந்திக்கு.....

இருட்டறையில் என்
வாழக்கை புரண்டு
இருண்டுகொண்டிருக்க
யாரோ வெளியே மனங்களின்
வெளிச்சம் பற்றி
பேசக்கேட்கிறேன்.....

யோசித்து யோசித்து
நடக்கிறேன் நான் - என்
அறைகளுக்குள் விழிகளை
திறக்கவேண்டியதில்லை
எனினும் எனை கடந்து
செல்கின்றன எனது
பொருட்படாத உலகும்
மைல்கற்களும்.........

எப்போதாவது கண்களை
என் கதவின் சிறு தூவாரங்களில்
செலுத்துகிறேன் - ஏதோ
பேசிச்செல்லும் மனிதர்களில்
நான் காண்பதென்னவோ
புரிபடாத அவர்களின்
மனப்பிரழ்ச்சிகளை மட்டுமே....

காற்றும் சில்லூறுகளும்
தனித்தனியே ஓசை
தருகின்றன - நான்
தனித்தனியே பதில்
சொல்லிக்கொள்கிறேன்....

யாருமற்ற உலகு
இப்பிரபஞ்சத்தில் ஏராளம்
பரிவும் இரக்கமும்
பஞ்சமாகிப்போனபின்
இப்பிரபஞ்சம் யாருமற்றவர்களால்
அழகாக்கப்படலாம்....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: உதிரும் தனிமை
« Reply #1 on: December 28, 2018, 09:51:58 AM »
Wonderful நண்பா. திரும்ப திரும்ப படிச்சிட்டே இருக்கேன்

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Guest

Re: உதிரும் தனிமை
« Reply #2 on: December 28, 2018, 12:28:07 PM »
நன்றி சிக்கு....

நான் திரும்ப திரும்ப அந்த புகைபடத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.......
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
Re: உதிரும் தனிமை
« Reply #3 on: December 28, 2018, 02:42:18 PM »


உதிர்ந்த தனிமையும்  ஏகாந்தமும் ...
உள்ள பிறழ்ச்சிகளின் பிரதிபலிப்பே !
பூட்டிய  கதவை திறந்து வந்தால் ..
வெளிச்சங்கள் விளக்கம் கொடுக்கும் !
புகைப்படமும் வரிகளும் ...
ஓர் இருண்ட உலகின் ...
திகிலை கிளப்புகின்றன !
ஆழ்ந்த பாராட்டுக்கள்!
அருமையான கவிதை !டொக்கு நண்பரே !


Offline சாக்ரடீஸ்

Re: உதிரும் தனிமை
« Reply #4 on: December 29, 2018, 12:58:54 PM »
எப்போதாவது கண்களை
என் கதவின் சிறு தூவாரங்களில்
செலுத்துகிறேன் - ஏதோ
பேசிச்செல்லும் மனிதர்களில்
நான் காண்பதென்னவோ
புரிபடாத அவர்களின்
மனப்பிரழ்ச்சிகளை மட்டுமே....
                dokku machi sema sema sema joooperuuuu

Offline Maran

Re: உதிரும் தனிமை
« Reply #5 on: January 10, 2019, 04:28:32 PM »


அருமையான கவிதை...  :)

அழகான கருவும், அதை மிக அழகாய் கவிதையாக்கி வரிகளில் கட்டமைத்துள்ளீர்கள்!. வாழ்த்துக்கள்!!  :)




மனப்பிரழ்ச்சிகளை - மனப்பிறழ்ச்சிகளை (அல்லது) உளப்பிறழ்ச்சி