Author Topic: அவளும் அவனும்  (Read 555 times)

Offline JasHaa

அவளும் அவனும்
« on: December 24, 2018, 02:01:52 PM »
   
                                 அவளும் அவனும்

அவள் :
விழி மூடி உனையே சுவாசிக்கிறேன் ...
விழி தாள் மூடினால்
உன் முகம் கண்டின்  எப்படியடா
உறக்கம் கொள்வாள்  பேதை ...

அவன் :
உன் விழி வீச்சினில்
விழ்த்துகிடக்கும்  காளை இவன்...
உன் கரம் கொண்டு மீட்பாயாக  கண்ணே  !

அவள் :
கரம்  பற்றும்  உன் ஸ்பரிசத்தில்  காதல்
பெருகும்  பேதை நெஞ்சினிலே  ..

அவன் :
பேதை என்று சொல்லும்  பேரழகியே ! 
செந்தமிழில்  சொற்கள்  இல்லையே .. 
காதலன் நான் உனை கவிவடிக்க!

அவள்:
காதலனே உன் காதல் கண்டு
பேதைமை இல்லை...
கவிவீச்சினில் அச்சம்  கொள்ளும்
அஞ்சுகம்  இவள்...

அவன்:
இமை மூடினாலும் இதயம்  கெஞ்சும் 
கன்னி உன் அஞ்சன  விழி தேடி ...

அவள்:
எனை தேடும்  உன்  மனம் அறியாத, 
மங்கை  இவள் மஞ்சம்  கொள்ளும்
பஞ்சணை  அதுவென்று  ??

அவன்:
பஞ்சணை கொள்ளும் அல்லி அறியாததா?
சொப்பனத்திலும் நீ எனை
தீண்டுவதில்லை  பெண்ணே !

அவள்:
இவள் கனவில் வந்தால்  நித்தமும்
உன் நித்திரை  கண்ணாமூச்சி  ஆடும் 
தொட்டு விடும்  தொலைவில்
நானும் உன் உறக்கமும்....

அவன்:
என் நித்திரை களவாடும் ￰காஞ்சனையே
உன் நெஞ்சம் எனது மஞ்சனையே !

அவள்:
நெஞ்சமத்தில் மஞ்சம் கொள்ளும் மன்னவன்   
அறியாத  வித்தகம்  உண்டோ பாரினில்  !
« Last Edit: December 24, 2018, 02:09:47 PM by JasHaa »