Author Topic: சலனமற்றுகிடக்கிறது பூமி....  (Read 693 times)

Offline Guest

அப்படியே சலனமற்றுக்கிடக்கிறது பூமி
துளைத்து ஆழங்களில்
அதிபயங்கரமாய் செலுத்திய
நச்சுக்களை தாங்கி
உள் வெந்து நெருப்புக்கவளங்களாய்
குடல்கள் கொப்பளித்து வீசும்
வெப்பத்தை அணைத்து குளிர் தருவார் தேடி
அப்படியே சலனமற்று கிடக்கிறது பூமி....
.
சூரியக்கதிர்களின் வீச்சில்
வெந்த சருமங்களை வியர்வையால்
நனைத்துழும் உழவனின் பாதச்சுவடுகளின்
மசக்கலில் செழுமை கொண்டு
குதூகலித்த பூமி வெறுமையில்
வீற்றிருக்கிறது....
.
தீர்த்தமாய் தூறும்
மழையின் முன்னால்
மண்டியிட்டமர காத்துக்கிடக்கிறது
வானம் பாத்த பூமி - இரை தி்ன்று
புறந்தள்ளிய தூண்டில்களாய்
வளைந்து நெளிந்து
நொடிந்து வீழ்கிறான் விவசாயி....
.
தண்ணீர் கேட்கிறது பூமி
சலனமற்று சாவின் வளிம்பில்
தொண்டை நனைக்க
துளி தண்ணீர் கேட்கிறது பூமி
வாய்க்கால்களில் மிதந்து போயின
வரப்புகளின் நீதி....
.
களனியில் பதித்த பாதங்களில்
சோற்றுப்பருக்கைகள்
முட்களாய் குத்தின
உலர்ந்து போனதொரு பழைய சாதத்தின்
பருக்கைகள்.....
.
நெருப்பை விதைத்து
நெருப்பை கொய்து
நெருப்பாய் போகும் மண்
சலனமற்றுகிடக்கிறது பூமி....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ