Author Topic: நாம் இணையை பிரிந்தவர்கள்  (Read 794 times)

Offline Guest

இணைவதற்காய் பிரிதலும்
இணைந்து பிரிதலும்
என பிரிதலிலும் வகைகள்
இருந்திருக்கும்..

நாம் இணையை பிரிந்தவர்கள்..

ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தின் அழுத்தத்தை
அணைகட்டி தடுத்த
ஒரு உணர்வுணரும் பொழுதில்
பிரிதல் களைகிறோம்.

கொள்ளளவை தாண்டிய வெள்ளமாய்
பொங்கிவழியும் அன்புக்கு மதகுகளை
மீறுதல் ஒன்றும் இயலாததில்லை..

இறைக்கு கட்டுப்படும் இயற்கை போல்
ஆர்ப்பரிப்புகள் மறைத்து
அமைதி கொள்கிறது
கட்டுண்ட நதி.

நதிகள் கடலுக்கானவை..
நம்மில் யார் நதி?. யார் கடல்?..

ஆதங்கங்களையும்
தவிப்புக்களையும்
குழப்பங்களையும் தாண்டி
சிரித்தே கடக்க வேண்டியிருக்கிறது
அன்பின் பேரிழப்புகளை...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: நாம் இணையை பிரிந்தவர்கள்
« Reply #1 on: November 23, 2018, 08:02:57 PM »
Wonderful நண்பா!

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline regime

Re: நாம் இணையை பிரிந்தவர்கள்
« Reply #2 on: November 24, 2018, 09:29:34 AM »
NICE NAtpu keep it up 8)