Author Topic: ஒழுங்கற்றவைகளின் அழகியல்  (Read 647 times)

Offline Guest 2k

ஒழுங்கற்றவைகளின் அழகியல்

ஒற்றைச் சாளரத்தின்
நூலாம்படையில் சிக்கியிருக்கும்
பூவிதழ் ஒன்று
புறக்கணிப்புகளின் வழி நெடுநாளாய்
நின்றிருக்கும் பெரும்பாறை
ஒன்று
சாக்கடைப் புழுக்களை
கொத்தித் தின்ன காத்திருக்கும்
வெண்கொக்கு ஒன்று
மீதமிருக்கும் கடைசி பழத்தை
அழுகல்களிடையே கிடக்கும் தெருவோரவாசிக்கு விட்டுச் செல்லும்
ஏழைப் பெண்ணொருத்தி
அழகான வர்ண சுவர் நிறைந்த கொஞ்சும் மழலையின் கிறுக்கல்
மைவிழிக்கண்களை விட்டு வெளிச் சிதறும்
மைத்தீற்றல்
குளிரில் சிணுங்கித் திரியும் தெருநாயின்
சிறு குட்டிகள்
அஜ்ஜியின் மஞ்சள் முக வெற்றிலைச் சிரிப்பு
சிகரெட் கங்குகளிடைய முடிக்கப்படாத
பேரழகியின் சித்திரம்
பாதம் சுடும் பொன்மணல்
கடைசி இணுங்கல் மிச்சமிருக்கும் தேய்பிறை
முகமழிந்த பழைய புகைப்படத்தின் கடைசி தங்கயின் பஞ்சு விரல்கள்
பிரிந்து சென்றவரின் மணம் மீதமிருக்கும்
பழந்துணி ஒன்று, மற்றும்
எந்தவித ஒழுங்கும் இல்லாமல்
சிதறிக் கிடக்கும் இச்சிறு கவிதை கூட
ஒழுங்கற்றவையின் அழகியல் தான்
« Last Edit: November 10, 2018, 09:37:50 AM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline gab

Re: ஒழுங்கற்றவைகளின் அழகியல்
« Reply #1 on: November 10, 2018, 11:40:00 PM »
கவிதை அருமை. தோராயமாக தினமும் ஒரு கவிதை என்ற அளவில் உங்களோட கவிதை புயல் வீசிக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துகள்  சிக்கு .

Offline Guest 2k

Re: ஒழுங்கற்றவைகளின் அழகியல்
« Reply #2 on: November 11, 2018, 07:45:01 AM »
அன்பிற்கு நன்றி gab, தினம் ஒரு கவிதை எழுத எனக்கும் ஆசை தான். இருந்தாலும் என் கற்பனை வறட்சி அதற்கு இடமளிப்பதில்லை :).

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline SweeTie

Re: ஒழுங்கற்றவைகளின் அழகியல்
« Reply #3 on: November 12, 2018, 04:50:36 AM »
ஒழுங்கற்றவைகளின் அழகியல்  ஒழுங்காக  அழகு படுத்தப்பட்டுள்ளது.
கவிதை வரிகள் ஒன்றின்மேல் ஒன்று கட்டிப் புரள்கின்றன.   அவை  பந்திகளாக
பிரிக்கப்பட்டால்   மேலும் அழகுறும்  என்பது எனது கருத்து .    தொடரட்டும் 
உங்கள்  கவிப்பயணம்.    வாழ்த்துக்கள்.  .