Author Topic: சிவகாமியின் சபதம்  (Read 2927 times)

Offline JasHaa

சிவகாமியின் சபதம்
« on: November 05, 2018, 06:21:45 PM »
காஞ்சி  மாநகரம் 

    இன்றைக்கும் பழமை  மாறாம இருக்கற  காஞ்சி மாநகரம்  தாம் பல்லவ  சாம்ராஜ்யத்தின்  தலைமை  இடம்.  சேரரும், சோழரும், பாண்டிய  மன்னர்களும்  ஆண்டு  சிறப்பித்த  தென்னாட்டை  அலங்கரித்த  மற்றும் ஒரு சகாப்தமே  பல்லவ சாம்ராஜ்யம்.
பல்லவ அரசு  தழைத்தோங்கிய  காலத்தில்  சேர  சோழ  மன்னர்களின்  புகழ்  கொஞ்சம்  மங்கி போயிருந்தது... பல்லவ மன்னர்கள்  நீண்ட  வரலாறு படைக்கவில்லை  ஆனாலும் சில அற்புதங்களை  படைத்தனர் . அந்நாளிலே  கல்வியிற்  சிறந்த  நகரமாய்    காஞ்சி முன்னிறுத்தப்பட்டது. கல்வி  மட்டுமல்ல  கலை, இலக்கியம் , நடனம் , நாட்டியம் , சிற்பம் என அனைத்திலும் ...
" காஞ்சி பெண்ணின்  மீது  மோகம"்  கொண்ட மன்னர்களும்  பேரரசர்களும்  ஏராளம்  ....  இங்கு காஞ்சி   பெண் என குறிப்பிட  படுவது  காஞ்சி மாநகரமே....
சங்கம்  வைத்து  தமிழ்  வளர்த்த  மதுரை  மாநகரத்தில்   இருந்து தேடி வந்து  தமிழ் கற்றனராம்  காஞ்சியில் ...
￰இவ்வளவு பெருமைகளை  உள்ளடக்கிய  காஞ்சி இன்னும்  மெருகேற செய்தவர்  காஞ்சி பேரரசர்  "  மகேந்திர  பல்லவர்  "
அடுத்த  பகுதியில்  அவரை  பற்றி  .....