Author Topic: ஒரு முறை உன்னைப் பார்ப்பேனா  (Read 829 times)

Offline thamilan

உன்னை பார்க்க வேண்டும் என்பது
பலநாள் கனவு
காதில் கேட்கும் ஒலியாக
தழுவிச் செல்லும் காற்றாக
எப்போதும் என்னுடனேயே  இருக்கிறாய்
உன்னைப் பார்க்கத்தான் முடியவில்லை

அனுதினமும் உன்னை
எனக்குள் உணருகிறேன்
அணுக்களாக என் ரத்தத்துடன்
கலந்திருப்பதை உணருகிறேன்
உணர முடிகிறது தவிர
பார்க்க முடியவில்லை

எதோ ஒரு தடங்கல்
ஒவ்வொரு தடவையும்
ஒரு முறை
ஒரே ஒரு முறை
பார்த்தால் போதும்
எனது வாழ்வுக்கு ஒரு
அர்த்தம் கிடைத்துவிடும்

ஒன்றும் வேண்டாம் எனக்கு
வேறு ஒன்றுமே வேண்டாம்
உன்னை பார்த்தாலே போதும்
என்னை அனுதினமும்
கொல்லாமல் கொல்பவள்
கனவிலும் நினைவிலும் வந்து
என்னை வாட்டி வதைப்பவள்
என் தூக்கத்தை தொலைத்தவள் யாரென்று
ஒரு முறை பார்த்தால் போதும்

நிலவைத் தொட நினைப்பதும்
காற்றை கட்டித் தழுவதும்
பேராசை தான்
ஆசையே மனிதனின் முன்னேற்றத்துக்கு
ஏணிப் படி
ஆசைப்பட்டதாலே தானே
மனிதன் நிலவைத்  தொட்டான் 
ஆசைப்பட்டதால் தானே
இமயத்தையும் தொட்டான்

 நான் உன்னைத் தொட நினைக்கவில்லை
ஒரு முறை பார்த்தாலே போதும்