கருவில் உயிர் சுமந்து கற்பனையில்
உரு கொடுத்து கல்லறை செல்லும் வரை
கனிவான பாசத்தை ஊட்டி - தாயானவளே
மட்டில்லா மகிழ்வளித்து மனதெல்லாம்
நிறைவளித்து மருமகள் என்ற பேர் பூத்து
- மனைவியானவளே
உயிரோடு உயிராகி உணர்வோடுகலந்த
உன்னத உறவாகி - சகோதரியானவளே
பெற்றோரின் பாசம் பெற்று பெற்றோருக்காய்
பாசத்தை ஊட்டி பெருமையின் சிகரமாகி
- மகளானவளே
இத்தனை உருப்பெற்றும் அத்தனையும்
சிறக்கவரும் - பெண்மையானவளே
உன்னை போற்றிடும் நாளிது உன்னை
வாழ்திடும் நாளிது ..
அனைத்துலக ஆண்கள்
சார்பில் - அகம் நிறைந்த இனிய பெண்கள் தின
வாழ்த்துக்கள்