Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
இங்கு ஒரு தகவல்
»
ஆப்கானியர்களுக்கு இனி அமேரிக்கர்களிடமிருந்து விடுதலை இல்லை!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ஆப்கானியர்களுக்கு இனி அமேரிக்கர்களிடமிருந்து விடுதலை இல்லை! (Read 5159 times)
Yousuf
Golden Member
Posts: 3159
Total likes: 46
Total likes: 46
Karma: +0/-0
Gender:
ஆப்கானியர்களுக்கு இனி அமேரிக்கர்களிடமிருந்து விடுதலை இல்லை!
«
on:
March 05, 2012, 09:01:59 PM »
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வசமுள்ள பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் கோடி டாலருக்கு மேல் மதிப்புள்ள கனிம வளம் கொட்டிக்கிடப் பதாக அமெரிக்க ராணுவ மும், அமெரிக்க அரசின் புவியியல் ஆய்வும் தயாரித்த அறிக்கை கூறுகிறது.ஆப்கானிஸ்தான் செய்தியாளர்கள் மிகுதியாக இருந்த கூட்டத்தில் ஜனா திபதி ஹமீத் கர்சாயின் செய் தித் தொடர்பாளர் வாஹீத் ஓமர் “பல ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில், கேட்ட நற்செய்தி” என்று கூறினார். ஆப்கானிஸ்தான் அரசின் சுரங்கம், வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகள், இப்பயன்கள் ஆப்கானிஸ் தான் மக்களைச் சென்ற டைவதற்கு பாடுபட வேண்டும் என்று அரசு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.ஆப்கானிஸ்தானில் அர சியல் நிலையற்ற தாலிபான் கள் மிகுந்த பகுதிகளில் பெரும்பாலான கனிம வளம் குவிந்துள்ளது. எனவே, அங்குள்ள அர சியல் மற்றும் சமுதாயச் சூழல்கள் மாற வேண்டும். அண்டை நாடுகளும், தாலி பான்களும் செல்வத்தின் பலனை அடைய முயற்சிப் பார்கள் என்று செய்தியா ளர்கள் கூட்டத்தில் கருத்து வெளியிட்டனர்.
இரும்பு, தங்கம், நியோ பியம், லித்தியம், கோபால்ட் உள்ளிட்ட ஏராளமான கனிமங்கள் உள்ளன என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ கூறு கிறது. மிகவும் லகுவான லித்தியம் இங்கு ஏராளமாக உள்ளது. தொழில்துறை களில் லித்தியத்துக்கு பெரும் கிராக்கி உள்ளது. மொபைல் தொலைபேசி, புகைப்படக் கருவி, ஐ-பேட் மற்றும் லேப்டாப் ஆகிய வற்றிலும், மின்சாரம் மற் றும் ஹைபிரிட் கார்களி லும் பயன்படும் மின்கலங் கள் தயாரிக்க இது பயன் படும்.
இராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளை யடிப்பதற்காக சதாம் உசே னைக் கொன்று, இராக்கை ஆக்கிரமித்துள்ளது அமெரிக்கா. இராக்கில் அமைதி திரும்பிய பின் 2011ல்படைகள் விலக்கப் படும் என்று அமெரிக்கா கூறியது. ஆனால், ஆப்கா னிஸ்தானில் கூடுதலாக 35 ஆயிரம் படைகளை அமெ ரிக்கா குவித்துள்ளது.பின்லேடனை உயிரு டனோ, பிணமாகவோ பிடிக்கப் போவதாக ஆப் கானிஸ்தானில் காலடி யெடுத்து வைத்த அமெ ரிக்கா, அங்கிருந்து படை களை விலக்கிக் கொள் வதாக அறிவிக்கவில்லை. புஷ்ஷை விட வேறுபாடா னவர் என்று கூறப்பட்ட ஒபாமா, அங்கு கூடுதலாகப் படைகளை அனுப்பியுள் ளார். அமெரிக்கா கொள் ளையிட மற்றுமொரு நாடு கிடைத்துவிட்டது. கனிம வளங்களுக்கான யுத்தத்தை இந்தியாவின் தண்டகாரண்யாவுக்கு விரிவு படுத்திய அமெரிக்காவுக்காக சிதம்பரம், மன்மோகன் குழுவினர் பழங்குடி மக்களை வேட்டையாடி அழித்து வருகிறார்கள். இனி ஆப்கன் மக்களுக்கும் எப்போதும் விடிவு இல்லை. இது இப்பிராந்தியத்தில் கடும் போர்பதட்டத்தை உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
இங்கு ஒரு தகவல்
»
ஆப்கானியர்களுக்கு இனி அமேரிக்கர்களிடமிருந்து விடுதலை இல்லை!