Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ முலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைகளா? ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ முலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைகளா? ~ (Read 359 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226321
Total likes: 28787
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ முலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைகளா? ~
«
on:
September 28, 2017, 11:20:50 PM »
முலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைகளா?
பருவகால பழங்களை உண்பதால் அந்த பருவகாலத்திற்கு ஏற்ப சத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற முடிகிறது. அதே சமயம் அனைத்து பருவகாலங்களிலும் கிடைக்கும் பழங்களை உண்பதன் மூலமாகவும் அனைத்து சத்துக்களையும் பெற முடிகிறது. அந்த வகையில் முலாம்பழம் அனைத்து பருவகாலங்களிலும் கிடைக்க கூடியது. இது நமது ஊர்ப்பகுதியிலேயே விளைகிறது. இதில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. இது வெள்ளரி குடும்பத்தை சார்ந்தது. இந்த முலாம்பழத்தின் நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.
உடலிலுள்ள வெப்பத்தை உடனடியாகப் போக்கும் தன்மை உடையதால் அதிக உஷ்ணம் உள்ளவர்கள் எப்போதும் உட்கொள்ளலாம். அதுவும், இந்த கோடைக் காலத்தில் முலாம்பழத்துக்கே முதல் இடம். பழத்தில் 60 சதவீகிதம் நீர்ச்சத்து இருப்பதால் சிறுநீர் பெருக்கியாகச் செயல்படும். உடலின் இயல்பான வளர்சிதை மாற்றத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும்.
சிறுநீர் பாதையில் எரிச்சல் உள்ளவர்கள் இதனை உண்டால், உடனடித் தீர்வு கிடைக்கும். நீர் வேட்கையும் தணியும். சித்த மருத்துவத்தில், முலாம்பழ விதைகள் தனியே எடுக்கப்பட்டு உலர்த்தி, அரைக்கப்பட்டு மருந்துப் பொருட்களுடன் சேர்த்தும் தரப்படுகிறது. காரணம், இதன் விதைகளுக்கு வயிற்றுப் புழுக்களைக் கொல்லும் சக்தி உண்டு. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் இது நல்ல நிவாரணி.
சரியான உணவுப்பழக்கமின்மை, அதிகம் மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் பலருக்கும் வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் பிரச்னை உள்ளவர்கள், இந்தப் பழத்தைத் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்புண் பூரண குணமடையும். மிகச் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுவதால், மலக்கட்டு பிரச்னையும் நீங்கும்
உடலுக்கு பல நன்மைகளைத் தந்தாலும், இந்தப் பழத்தை ஒரு சிலர் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இது அதிகக் குளிர்ச்சியானது என்பதால், மிக விரைவில் உடலில் கபத்தை தூண்டக்கூடியது.
எளிதில் சளிப்பிடிக்கும் என்பதால் குழந்தைகளுக்கு, குளிர்காலங்களில் முலாம்பழம் தருவதைத் தவிர்க்கலாம். ஏற்கனவே கபப் பிரச்னை உள்ள பெரியவர்கள், ஆஸ்துமா, மூச்சிரைப்பு உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவேண்டும். கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, மூட்டுத் தேய்மானங்கள் ஆகியவை அனைத்தும் வாதப் பாதிப்புகளே. எனவே, வாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ முலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைகளா? ~