Author Topic: மரணம் பேசியது  (Read 1027 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
மரணம் பேசியது
« on: May 24, 2017, 01:27:29 PM »
மரணம் பேசியது

மரணம்
வருகிறேன் என்றது
வா என்றேன் 
எப்போது என்றது
உன் விருப்பம் போல் என்றேன்
அதுதான் வழக்கம்
சலுகை உனக்கு சொல் என்றது


நூறு வயதில் வா என்றேன்
அழுதது மரணம்
ஏன் என்றேன்
நீ பாவம் என்றது
புரியவில்லை என்றேன்
தாங்கிட மாட்டாய் என்றது
ஏனென கேட்டேன்
அன்பில்லா உலகம் என்றது

எப்படி தெரியும் என்றேன்
நானும் அனுபவித்தேன் என்றது
எப்படி என்றேன்
பாவம் என்று நான் நேசித்தால்
யாரிடமும் நன்றி இல்லை
கேவலமாய்
கொடிய வார்த்தைகள் கொண்டு
இகழ்கிறார்கள் என்றது 

நான் வெறுத்து விட்டால்
தாங்க மாட்டார்கள்
நடை தளர்ந்து
உடல் நலிந்து
தானே இயங்க சக்தி இன்றி
கேட்பார் காண்பார் யாருமின்றி
மெய் அழுகி பொய்யாகி
அன்பு செய்ய யாருமின்றி
தவிக்கையிலே எனை அழைப்பார்
நான் என்ன வேலை இல்லா வெட்டியோ 

 
இரக்கம் கொண்டே கடவுள்
கட்டளையிட வருகிறேன்
உண்மையை உணர்ந்து
எனை ஏற்றால் மகிழ்ச்சி
இல்லையேல் அழுந்துவதும்
வசை கேட்பதும் உனக்கான நியதி


இப்போது சொல் எப்போது வர என்றது
உன் விருப்பம் போல் வேண்டாம்
கடவுள் இரங்கும்போது வா என்றேன்


சிரித்து விட்டு சொன்னது
சீக்கிரம் வரேன்
கடவுள் சொன்னார்
உன்னிடம் சொல்ல
மனிதனாய் வாழட்டுமாம்
மரணத்தின் பின் தன்னிடம் வர


நன்றி என்றேன்
வேண்டாம் என்றது
ஏன் என்றேன்
நன்றி அபுக்கு தூரம் என்றது
வலிக்கையில்
வெறுக்காது வா என்றேன்
வருந்த விடேனென விடைபெற்றது


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SunRisE

Re: மரணம் பேசியது
« Reply #1 on: May 24, 2017, 03:13:24 PM »
சகோதரா

மரணத்தை விட
உன் வாழ்க்கை
கொடுமை
என மரணமே புலம்பும்
வலி மிகுந்த. கவிதை

உஙகள். வரிகளில்
இரக்கம் கொண்டே கடவுள்
கட்டளையிட வருகிறேன்
உண்மையை உணர்ந்து
எனை ஏற்றால் மகிழ்ச்சி
இல்லையேல் அழுந்துவதும்
வசை கேட்பதும் உனக்கான நியதி

எளிய நடையில்
அழகிய கவிதைக்கு. நன்றி.

Offline MyNa

Re: மரணம் பேசியது
« Reply #2 on: May 24, 2017, 10:20:25 PM »
Vanakam sarithan :)
Maranam pesinal ipadi than irukumo??
Vithiyasamaana sinthanaiyil azhagana kavithai..
Yosika vaithathu varigal.. vazthukal :)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: மரணம் பேசியது
« Reply #3 on: May 25, 2017, 03:21:18 AM »
வணக்கம் பிரியன் சகோதரா

உண்மைதான் மரணம் பாவம்
உயிர்களிடத்தில்
அதுவும் மனிதனிடத்தில்
மரணம் படும் பாடு இருக்கே
ஐயோ பாவம்  :D :D :D 
நமக்காக அது அழுகிறது


உங்கள் கருத்துக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் சகோ
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: மரணம் பேசியது
« Reply #4 on: May 25, 2017, 03:30:21 AM »
வணக்கம் தோழி

உண்மையில் என்னுடன்
மரணம் பேசிய அனைத்தையும்
சொல்லிடவில்லை மைனா


என்னை போல் இல்லை   
மிகவும் நல்லவர் அவர்
இப்படி எல்லாம் பேசி பார்ப்பேன்
தெளிவாக பதிலும் பேசுவார்


தயவு செய்து சிறியவர்களுக்கு
ஒரு அறிவித்தல் உங்களுக்கும் சேர்த்தே
யாரும் இப்படி முயற்சிக்க வேண்டாம்
  :D :D :D

நன்றி மைனா உங்கள் பதிவுக்கு
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ChuMMa

Re: மரணம் பேசியது
« Reply #5 on: May 25, 2017, 11:54:50 AM »
சகோ ,

ஒருவர் விரும்பிடும் நேரம்
மரணம் வரும் எனில் அதற்கு
இணையான வரம் உலகில் ஏதுமில்லை


அருமையான வரிகள் கொண்ட கவிதை

வாழ்த்துக்கள்
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline AYaNa

Re: மரணம் பேசியது
« Reply #6 on: May 26, 2017, 12:06:47 PM »
superb

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: மரணம் பேசியது
« Reply #7 on: June 03, 2017, 08:21:23 AM »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: மரணம் பேசியது
« Reply #8 on: June 03, 2017, 08:40:20 AM »
anna ,

வலிக்கையில்
வெறுக்காது வா என்றேன்


arumaiyana varikal
nam ninaikum pothu maranam varuvathu oru varam
athu ellorukum amaiyathu

kadavulin irakathu ku innai illai athu emaku apo apo than purikurathu

anna arumaiyanan pathivu
naum alaikuren maranathi athu than vantha padu illai

Offline SwarNa

Re: மரணம் பேசியது
« Reply #9 on: June 06, 2017, 03:45:24 PM »
sari anna
 eliya nadai
azuthamana vali migundha  varthaigall
:)