அன்பிற்குரிய சரிதன் அண்ணா,
தங்களுடைய கவிதையை வாழ்த்துரைக்க
எனது தகைமை போதியளவு இல்லை
இருந்த போதிலும் ஓர் இரசிகனின் பார்வையில்
கவிதையின் வரிகளைப்படிக்கும் பொழுது
ஓயாது பாயும் கடல் அலைகளும் வானத்தில்
சுதந்திரமாய் பறந்து திரியும் பறவைகளும்
காற்றின் வீச்சில் ஆடிக் கொண்டிருக்கும்
மரங்களும் சற்று நேரம் உறைந்து போன தருணமாய்
தங்களுடைய கவியின் ஆற்றல் நிறைந்து நிற்கிறது.
பெண்ணவள் மணமகள் ஆகி மணாளனை பறிகொடுத்து
சமூகத்தில் யாவையும் இழந்த உளக்குமுறலின் உணர்வை
அறிந்த கவிஞனின் வரிகள்.
வாழ்த்துக்கள் அண்ணா