என் தனிமை பயணம் தொடர்கிறது...
ஒவ்வொரு நாளும்
ஒரு யுகமாய்.....
ஒவ்வொரு பொழுதும்
சோகமாய்......
நீ இல்லாமல்...
வெறுத்த ஒருவரையே மறக்கமுடியாதபோது
விரும்பிய உன்னை எப்படி மறப்பது?
கதறி அழவும் முடியாமல்
கண்ணீரை அடக்கவும் முடியாமல்
கலங்கியபடி வீதியில் நடக்கிறேன் .
அடுத்தமுறையாவது
விசாரித்து
பிறக்க வேண்டும்...
எந்த
ஜென்மத்தில்,,
நீ மீண்டும்
கிடைப்பாயென்று..!