உலக வெப்பமயமாதல் பற்றி நிறையப் படிக்கிறோம், பேசுகிறோம். ஆனால் அதைத் தடுப்பதற்கு நம்மளவில் என்ன செய்கிறோம் என்று யோசிக்கிறோமா? உலக வெப்பமயமாதலைத் தடுப்பது என்றாலே பெரிய பெரிய முயற்சிகள்தான் என்றில்லை. அவரவர் அளவிலான சிறுசிறு செயல்பாடுகள், சிறுதுளி பெருவெள்ளமாய்ப் பயனளிக்கும்.
இதோ, இவ்விஷயங்களைக் கடைப்பிடிக்க முயன்று பாருங்களேன்...
1. சூரிய வெளிச்சப் பிரகாசம்:
வெப்பமண்டலப் பிரதேசத்தில் இருப்பதால் நம் நாட்டில் சூரிய வெளிச்சத்துக்குக் குறைவேயில்லை. ஆனால் வருடம் முழுவதும் `சுள்'ளென்று அடிக்கும் சூரியனை எந்தளவு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது கேள்விக்குறி. நமது மின்தேவைக்கு சூரியசக்தி `சோலார் பேனல்கள்' அமைப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால், நமக்கு லாபமே. வெந்நீருக்கு உதவும் `சோலார் வாட்டர் ஹீட்டிங் சிஸ்டம்' இன்று பரவலாகப் பயன்படுëத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இதில் தொடங்கலாம். இது நமது மின் வாரிய பில்தொகையை வெகுவாகக் குறைக்கும்.
2. மழையைப் போற்றுவோம்:
பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது வாஷ்பேசின் குழாயில் தண்ணீர் விழுந்துகொண்டிருக்க வேண்டாம். குளிப்பது என்றாலும், ஒரு பெரிய பக்கெட் அளவு போதும். ஷவரை பயன்படுத்துவீர்கள் என்றால், அதில் நீர் விழும் அளவைக் கட்டுப்படுத்தும் `ரெகுலேட்டரை' பொருத்துங்கள். உங்கள் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் தேவை. பூமியில் விழும் ஒரு துளி மழை நீர் கூட வீணாக வேண்டாம். கசியும் குழாய்கள், டிïப்களையும் அவ்வப்போது கவனியுங்கள்.
3. காகிதத்தைக் கசக்க வேண்டாம்:
கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று காகிதத்தில் கிறுக்கி, கசக்கி எறிந்துகொண்டிருக்க வேண்டாம். `பேப்பர்' பயன்பாடு குறைந்துவரும் நாளிது. பில்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவது முதல், மாதாந்திர வங்கி அறிக்கையைப் பெறுவது வரை தற்போது எல்லாவற்றுக்கும் `ஆன்லைன்' வசதியை பயன் படுத்தலாம். தவிர்க்க முடியாமல் பேப்பரை பயன்படுத்தும்போதும் அதன் இருபுறமும் பயன்படுத்துங்கள்- அது பேனாவில் எழுதுவது என்றாலும், பிரிண்டரில் பிரிண்ட்-அவுட் எடுப்பது என்றாலும். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக பேப்பர் பைகளை பயன்படுத்தலாம் என்கிறார்கள். நீங்கள் ஒரு படி மேலேபோய், கடைக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்லலாமே!
4. நடையே நலம்:
என்னதான் டிராபிக் ஜாம் அவஸ்தைப்படுத்தினாலும் நாள்தோறும் வாகனத்தைத்தானே பயன்படுத்து கிறீர்கள்? அதிலும் அடுத்த தெரு கடைக்குக் கூட வாகனம் ஏன்? நடப்பது உடல்நலத்துக்கு மட்டுமல்ல, `பர்ஸ் நலத்துக்கும்' நல்லது. சைக்கிள் இருந்தால் சைக்கிளை ஓட்டிச் செல்லுங்கள். பெட்ரோலிய விலை கூடிக்கொண்டே செல்லும் நிலையில், முடிந்த வரை பஸ்களில் பயணியுங்கள்.
5. பூமி ஒளிரட்டும்:
நம் வீடு இரவில் பிரகாசமாக இருக்க வேண்டும்தான். ஆனால் நாம் வாழும் பூமியும் நீண்டகாலம் பிரகாசமாக இருக்க வேண்டாமா? குறைவான மின்சக்தியைப் பயன்படுத்தும் சி.எப்.எல். விளக்குகள் வீட்டை மட்டுமல்ல, செலவைக் குறைத்து உங்கள் முகத்தையும் பிரகாசிக்க வைக்கும். மின்சாதனங் களைப் பயன்படுத்தாதபோது அணைத்து வையுங்கள். அது கம்ப்ïட்டர், லேப்டாப்பாக இருந்தாலும். ஆளில்லாத அறையில் விளக்கு எரிய வேண்டாம், ஏ.சி., மின்விசிறி ஓடிக் கொண்டிருக்க வேண்டாம்.
6. தாரக மந்திரம்:
`குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி' என்ற தாரக மந்திரத்தை மனதில் வையுங்கள். நீங்கள் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை, அளவைக் குறைப்பது, கூடுமானவரை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவது, மறுசுழற்சி செய்வதுதான் இதன் விரிவாக்கப் பொருள். இந்த நோக்கில் யோசித்தால், எண்ணற்ற வழிகள் உங்களுக்குப் பிடிபடும்!