உண்ணும் ஒவ்வோர் அரிசியிலும் உண்ணுபவர் பெயர்
இருக்குமோ இல்லையோ நிச்சயம் உன் பெயர் இருக்குமே
எனது அருமை விவசாயியே !!
மேற்கத்திய கலாச்சாரா உணவை உண்டு பீற்றி கொள்ளும்
நாம்- ஏனோ நம் பாவம் விவாசியை மறைமுகமாய் கொல்றோம்?!!
விவசாயி கடனும் சரி அதன் தள்ளுபடியும் சரி பயன் பெறுவது
விவசாயி அல்ல பண முதலைகள் மட்டுமே !
தரமான உணவை ஏற்றுமதி செய்து விட்டு கழிவுகளை இறக்குமதி
செய்யும் நம் அரசியல் வாதியின் பிடியில் அழிகின்றான் அவன் !
அவன் போராடுவது தன் வம்சம் செழிக்க அல்ல
நம் வம்சம் ஆரோக்கியமாய் வாழவே
ஒவ்வொரு வேளை உணவு உண்ணும் போதும்
அவனை நினை !
அவனை நீ புறம் தள்ளினால் -நீ இறக்கும் போது
வாய்க்கரிசி போட கூட அரிசி இருக்காது
-----சும்மா --------
பி.கு:- சிறந்த படைப்புகள் இருக்கும் ஓவியம் உயிராகிறது
நிகழ்ச்சியில் என் கிறுக்கல் வேண்டாம் என்று எண்ணியே
இங்கு பதிவிடுகிறேன் ...நன்றி