Author Topic: ~ ராகி இனிப்பு இடியாப்பம் - ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றது! ~  (Read 362 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ராகி இனிப்பு இடியாப்பம்



தேவையானவை:

 ரெடிமேட் ராகி இடியாப்ப மிக்ஸ் - 1 கப், தேங்காய்த்துருவல், கருப்பட்டி துருவியது - தலா 1/4 கப், ஏலக்காய் - 2, நெய் - 1 டீஸ்பூன், காராமணி - 2 டேபிள்ஸ்பூன் ( 2 மணி நேரம் ஊற வைக்கவும்), உலர் பழங்கள் நறுக்கியது - கால் கப், (கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், அத்திப் பழம், திராட்சை)


செய்முறை:

 வாணலியில் நீரைக் கொதிக்கவைத்து ராகி இடியாப்ப மிக்ஸைப் போட்டு வேகவிட்டு எடுத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். ஊறிய காராமணியை வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வெந்த இடியாப்பத்துடன் வெந்த காராமணி, தேங்காய்த்துருவல், உலர் பழங்கள், கருப்பட்டித் துருவல் போட்டுக் கிளற வேண்டும். சிறிது நெய்யில் ஏலக்காயை வறுத்துக் கொட்டிக் கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்:

 ராகியில் புரதச்சத்து அதிகம். தேங்காயில் நல்ல கொழுப்பு உள்ளது. காராமணியில் புரதமும் கொழுப்பும் உள்ளன. உலர் பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்துக்கு ஏற்றது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன.