இன்றைய காதலா கூடாதடி
நம்பிடாதே என்னையும் நல்லோர்
எவரென அறியாயடி தங்கமே
குழவியடி நீ ,அறியாது ஆசை என
ஆற்றுப்படுத்தினாய் எனை
அடம்பிடித்தே உன் அகமதில்
இடம்பிடிப்பேனோ
ஏ மின்மினிப்பூச்சியே!
இயம்பிடு எனதன்பை,வாழ்வில்
ஒளியேற்றச்சொல்
தும்பியே! வெளிறிய வாழ்வும் வண்ணம்
பெற அவனன்பு தேவை எனக்கூறு
மழையே! அன்புச்சாரலில் நனைந்திட
காத்திருப்பதாய் செப்புக
விண்மீன்களே!
அவனுடன் என்னை மட்டுமே
காண விழைவதாய்ப் பகிர்க
குளிர் நிலவே,என்னவனின் மனம்
குளிர்ந்திட சொல்வாய் என தன்பை
ஆதவனே , வெம்மையில் வாடிடும் பேதையின்
"அவன்"
இன்மையை இம்மையில் மறுமை
தீர்த்திட வகை செய்யாயோ
காலனின் கரமதும் என்னில் வீழும்முன்னே
காதலன் என் கை பிடிக்க எண்ணும் எனதெண்ணம்
ஈடேறுமோ? கடைந்தேறுவேனோ?
என்
தேடலில் முதலும் முடிவுமாய்
நீ <3