Author Topic: ஏரியில் ஒருவன் !  (Read 401 times)

Offline Maran

ஏரியில் ஒருவன் !
« on: December 21, 2016, 12:26:09 PM »


ஏரியில் ஒருவன் !


உட்காரப்

புல்வெளி.

எதிரே

நீர்வெளி.

நீர்மேல் எண்ணெயாய்

சூரியன் .

பால் சொட்டுகளாய்

பறவைகள் .

முட்டாமல் மோதாமல்

இணக்கமாய் காற்று .

தூரத் தூர ரயிலோசைக்கும்

செவிக் கூசும் நிசப்தம் .

..............................................

................................

எல்லாம் தவிர்த்து

கவனமாய் காத்திருக்கிறான்

கரையில் ஒருவன் .

தொண்டையை கிழித்து

கண்ணைத் துளைத்த

தூண்டில் முள்ளுடன்

துடிக்கும் ஒரு

மீனைக் காணும் ஆவலுடன் .




Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ஏரியில் ஒருவன் !
« Reply #1 on: December 29, 2016, 05:18:23 PM »
தோழா மாறா வணக்கம்,

சிறு கவிதையே ஆயினும்
மேலோட்டமாய் கடந்திட
முடியவில்லை தோழா!

எதையாயினும் உணர்த்தி
உலுக்குகிறாய்!

தூண்டில் முள்ளுடன்
துடிக்கும் ஒரு
மீனைக் காணும் ஆவலுடன்


வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....