ஐயா தமிழ் வணக்கம்.
எலும்புகள் கொண்டு
தூண்கள் எழுப்பி
நரம்புகள் கொண்டு
வேலி இட்டு
இரத்த ஆறு கொண்டு
அகழி கட்டி
இதயம் எனும்
கோட்டைக்குள்
குடி வைத்திருந்த உன்னை
திருடிச் சென்றவர் யார்? !!!
இத்தனை ஆழமான அன்புக்காவலை
மீறியும் திருடு போகுமோ!
திருடினாரை மனிதரென சொல்லிடல்
தகுமோ!
இல்லை!
திருடு போக ஒன்றிப் போயிருந்தால்
இதுவல்லோ உலகில் பெருத்த கொடுமை.
தேடித்தர முடியவில்லை
தோழமையாய் வருகின்றேன்.
வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி