Author Topic: கிராமத்து காதல்  (Read 869 times)

Offline இணையத்தமிழன்

கிராமத்து காதல்
« on: October 27, 2016, 10:04:11 AM »
commercial photography locations

களை பறிக்க  நீ போகையிலே
களத்துமேட்டுக்கு நானும் வந்தேன்
காட்டுல தான் நீ தேன் எடுக்கையிலே
உன் உதட்டுல நானும் தேன் உறிஞ்சினேன்
நீ நாவற்பழம் ருசிக்கையிலே
உன் நாவையும் தான் நா ருசிச்சேன்

உன் மாராப்பு விலகையிலே
என் மனசு ஏனோ  துடிச்சிச்சிடி
மாலை மாத்தி மல்லுக்கட்ட
மனச ஏனோ பூட்டிவைச்சேன்

ஆலமரத்துப்பொந்துக்குள்ள 
ஆளுக்கொரு கிளி வளத்தோம்
ஆண் கிளிய நீவளக்க
பெண் கிளிய நா புடிக்க
ஆண் கிளியோ கடிச்சிச்சிடி
பெண் கிளியும் பறந்துச்சிடி

உங்கப்பன் சேதி சொல்ல
பதறி போய் நா நின்னேனே
பவுசா தான் வந்து நின்னான்
பட்டணத்து மாப்பிள்ள

பழசையெலாம் நெனச்சுக்கிட்டு
பழைய கஞ்சி நா குடிக்க
பந்தகாலு நட்டாச்சுன்னு
பத்திரிக்கைய நீ நீட்ட
கத்தியால குத்தினாலும்
கலங்காம நின்னவண்டி

நீ சொன்ன வார்த்தையிலே
என்ரெண்டு கண்ணும் கலங்கிச்சிடி
                                             -இணையத்தமிழன்
                                               ( மணிகண்டன் )
« Last Edit: October 27, 2016, 12:29:48 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline GuruTN

Re: கிராமத்து காதல்
« Reply #1 on: November 02, 2016, 06:16:55 AM »
சொல்ல மொழி இல்லை அசத்திட்ட மச்சி.. மணி...

Offline இணையத்தமிழன்

Re: கிராமத்து காதல்
« Reply #2 on: November 02, 2016, 08:11:49 AM »
நன்றி மச்சி குரு

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: கிராமத்து காதல்
« Reply #3 on: January 03, 2017, 10:30:56 PM »
வணக்கம்.

நீ சொன்ன வார்த்தையிலே
என்ரெண்டு கண்ணும் கலங்கிச்சிடி


கண்ணு மட்டுமா கலங்கும்?
உயிர் பிரியும் நேரமல்லவா!

கிராமத்தில் மிடுக்காய் வாழும்
வசதிபடைத்த குடும்பத்தார்
பொண்கள் வாழ்வை நிலைகுலைத்த
கொடுமை இவை!
கதைகள் அல்ல உண்மை.


உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....