« on: October 27, 2016, 09:31:36 AM »

திருவிழா கூட்டத்திலே
உடைமைகள் ஜாக்கிரதை
என்று என்காதில் ஒலிக்கையிலே
என் உள்ளத்தை களவாடியவளே
தேர் இழுக்கும் வேளையிலே
தேவதையாய் நின்றவளே
உன்கடைக்கண் பார்வைக்கே
காதலும் தான் மலர்ந்ததடி
நீ முழுசாய் தான் பார்த்திருந்தால்
மூச்சடைத்து நின்றிருப்பேன்
நீ முத்தம் ஒன்று கொடுத்திருந்தால்
மோட்சமும் தான் அடைந்திருப்பேன்
-இணையத்தமிழன்
( மணிகண்டன் )
« Last Edit: October 27, 2016, 09:39:18 AM by DraGoN BorN »

Logged

Unmaiyaana Anbirkku
Yemaattra Theriyaadhu
Yemaara Mattumey
Theriyum….
