Author Topic: நவீன தமிழன்  (Read 842 times)

Offline இணையத்தமிழன்

நவீன தமிழன்
« on: October 25, 2016, 11:40:00 AM »


கண்ணுக்கு மைதீட்டி
கவிதைக்கு பொய் தீட்டி
அழகுக்கு மெருகேற்றி
இயற்கைக்கு கைகாட்டி
செயற்கைக்கு செருக்கூடி
ஆடைக்கோ அழுக்கேற்றி
உணவிலோ உப்பேற்றி (நச்சு உப்புக்கள்)
நம் தாய்மொழியாம்
தமிழுக்கு தீமூட்டி
ஆங்கிலத்தை பாராட்டி
நாகூசாமல் நாள்தோறும்
சொல்வோம் நவநாகரிக
தமிழர் என்று
                               - இணைய தமிழன்
                                  ( மணிகண்டன் )

« Last Edit: October 25, 2016, 12:57:11 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: நவீன தமிழன்
« Reply #1 on: October 25, 2016, 12:23:54 PM »
கலப்படம் உணவில் தொடங்கி
அனைத்து உற்பத்தி பொருட்களிலும்
கலந்துவிட்ட இந்தக்காலத்தில்.
மொழியில் கலப்படம்
கலந்துவிடும் நிலையை
அழகாக உணர்த்தியுள்ளீர்கள்
அன்பு அண்ணா வாழ்த்துக்கள்

Offline இணையத்தமிழன்

Re: நவீன தமிழன்
« Reply #2 on: October 25, 2016, 12:49:27 PM »

எனது அருமை தம்பி அனோத் மிக்க நன்றி உமது வாழ்த்துக்களுக்கு
ஆம் தம்பி தற்போதைய காலத்தில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவதே காண்பதே  அரிதாய் உள்ளது இனி வரும் தலைமுறையாவது நன்றாக தமிழ் பேசுவதை கண்டிட ஆசை   

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline GuruTN

  • Jr. Member
  • *
  • Posts: 52
  • Total likes: 207
  • Karma: +0/-0
  • Gender: Male
  • !!!Anbullam Ondrin Aravanaipil Naan!!!
Re: நவீன தமிழன்
« Reply #3 on: October 25, 2016, 01:25:58 PM »
வீரமும் பண்பும் புகழும் கொண்ட வீரத்தமிழனின் அடையாளம் காக்காமல் அயல் நாட்டவர் அடையாளத்தை நமக்கானதாக சொந்தம் கொண்டாடி, நம்மை நாமே இழந்து கொண்டிருக்கின்றோம்.. அருமையான கவிதை, அற்புதம் என் அன்பு தோழா.. மனமார்ந்த வாழ்த்துக்கள்...
« Last Edit: October 25, 2016, 01:31:59 PM by GuruTN »
glittertextmaker.info" width="290" height="100" border="0

Offline இணையத்தமிழன்

Re: நவீன தமிழன்
« Reply #4 on: October 25, 2016, 01:40:06 PM »
எனது அருமை நண்பா குரு உன் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல
 ஆம் நமது அடையாளங்கள் சிறிது சிறிதாக அழிந்து கொண்டே வருகின்றன இனிவரும் காலத்திலாவது இந்நிலைமை மாறும் என்று எண்ணுகிறேன் 

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….