கவிதை ஒன்றை நான் எழுத முயன்ற பொது ஏற்பட்ட தடுமாற்றத்தினாலும், சொற்களின் தேடுதலினாலும் நாம் நேசிக்கும் நம் தாய் மொழியில் ஒரு வரி எழுத இவ்வளவு சிந்தனையும் நேரமும் தேவை படுகின்றதே என்று வியந்தே போனேன். மறுமுறை ஒரு கவிதை எழுத கருதும் தோன்ற வில்லை, சொற்களும் பிடிபடவில்லை... பூக்காரன் வந்து போகும் ஓரிரு நிமிட வேளையில் நம்தம் சிந்தனைகளை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்... இது போன்ற தலைப்புகளை கருத்தில் கொண்டு வருவதே கடினமாக உள்ளது...
உங்கள் சிறந்த கவிதைகளை இங்க பதிவு செய்வதில்லை என்று அவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டீர்கள்... என்னை போன்ற தேடுதலும், ஆர்வமும் கொண்டோருக்கு, இது போன்ற கவிதைகள் கற்றுக்கொடுக்கும் கருத்துகள் ஏராளம்... ஒரு அன்பு வேண்டுகோள், இனி பகிர்ந்து கொள்ள யோசனைகள் வேண்டாம்.. அன்பு வாழ்த்துக்கள்...
-குரு