" Why this கொலைவெறி " பாட்டுக்கு
பெண்கள் பலர் பயங்கர எதிர்ப்பு..
Why..? Why..?
பின்ன...,
அவங்களை கேவலப்படுத்தினா.,
பாத்துட்டு சும்மாவா இருப்பாங்க..
நிக்க வெச்சி நாக்கை பிடுங்கிக்கிற
மாதிரி கேப்பாங்கல்ல..
அந்த கோவத்துல ஒரு நியாயம்
இருக்குங்க..
அதனால தனுஷூக்கு என் கண்டனத்தை
தெரிவிச்சிக்கிறேன். ( ஐஸ்வர்யா.,
ஸ்ருதி அவங்கெல்லாம் விதிவிலக்கு )
பாட்டு எழுத தூண்டிவிட்டது.,
பாடும் போது கைதட்டினது..,
இதை தவிர அவங்க என்ன தப்பு
செஞ்சாங்க..? பாவம்..!
ஆனா..., இதுக்கு வெறும் கண்டனம்
மட்டும் போதுமா...?
இல்ல....
வீதில எறங்கி போராடி.., பஸ், கடை
மேல எல்லாம் கல்லு விட்டு எறிஞ்சி.,
கொடும்பாவி எதாச்சும் எரிக்கணுமான்னு..?
தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன்..
ஆனா அதுக்கு முன்னாடி..
தினம் தினம் " பெண்களினின் பெருமையை "
உலகத்துக்கு பறைசாத்துதே.. இந்த
மெகா சீரியல்கள்..
அட அதாங்க...
" நாத்தனாரின் கணவனை கொலை
செய்ய கூலிப்படைய அனுப்பும் அண்ணி..! "
" தோழியின் கணவனை அடைய
துடிக்கும் தோழி..! "
" சொத்துக்காக மகளாக நடித்து.,
ஏமாற்றும் பெண்..! "
" பணத்திற்க்காக மருமகளை
கொடுமைப்படுத்தும் மாமியார்..! "
" நாத்தனாரின் குழந்தையை கடத்தி.,
மறைத்து வைக்கும் அண்ணி.! "
" ஒரு வயதானவருக்கு சின்னவீடாக
இருக்கும் பெண்..! ( அவர் குடும்பத்தை
பழிவாங்கவாம்.) "
" சொத்துக்காக அண்ணியின் கருவில்
இருக்கும் குழந்தையை அழிக்கும்
நாத்தனார்.! "
இப்படி பல " மங்கையர் திலகங்களை "
நம்ம வீட்டு வரவேற்பு அறைக்கே
கூட்டிட்டு வருதே மெகா சீரியல்கள்...
அதையெல்லாம் ஒண்ணு விடாம
பாத்து., ரசிச்சி., அதை சூப்பர் ஹிட்
ஆக்கறது யாருங்க..??!