Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 104  (Read 3863 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 104
இந்த களத்தின்இந்த  நிழல் படம் BreeZe அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:30:27 AM by MysteRy »

Offline thamilan

பூமிக்கு பூமாதேவி
கடலுக்கு கடல் அன்னை   
கல்விக்கு சரஸ்வதி தேவி
செல்வத்துக்கு   லட்சுமி தேவி
வீரத்துக்கு சக்தி தேவி என
எல்லாவற்றுக்கும் பெண்களின் பெயரை வைத்து
போற்றும் ஆண்குலமே
காமத்துக்கும் பெண்கள் என
பெயர் வைத்ததும் ஏனோ

நம்மை பெற்றதும் ஒரு பெண்ணே
நம் கூட பிறந்ததும் பெண்ணே
நம் கூட வாழ்வின் முடிவு மட்டும்
கூட வருவதும் பெண்ணே

பெண்மையை போற்றுவோம்
பெண்களுக்கும் சம உரிமை கொடுப்போம்
என வாய் கிழிய
வார்த்தைகள் பேசும் மானிடா
மனது முழுக்க பெண்களைப் பற்றி
வக்கிரமங்க்களும் காம இச்சைகளும் தானே

எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது
வேலைத்தளங்களில் வீதிகளில்
பாடசாலைகளில் ஓடும் பஸ்களில்
எங்குமே பெண்களுகில்லை பாதுகாப்பு
உரசிப் பார்ப்பதற்கென்றே ஒரு ஆண்கள் கூட்டம்
அதை தட்டிக் கேட்க திறனற்ற
இன்னொரு கூட்டம்
 
ஓடும் ரயிலில் இளம் பெண் கற்பழிப்பு
ஓடும் பஸ்ஸில் இளம் பெண் மானபங்கம்
இது தினமும் தலைப்புச் செய்திகள் நம் நாட்டில்
முடிவில்லா தொடர்கதை இது

எத்தனை சட்டங்கள் இருந்தும் என்ன பயன்
இந்த  அவலங்களுக்கு
பெண்களும் ஒரு காரணம்
கையெடுத்துக் கும்பிட வேண்டிய பெண்கள்
இன்று காட்சிப் பொருளாக
குத்துவிளக்காய் இருக்க வேண்டிய பெண்கள்
இன்று கொலுமண்டப விளக்காய்

நாகரீகம் என்ற பெயரில்
ஆடை குறைப்பு
அலங்காரம் என்ற பெயரில்
அரிதாரம்
பூட்டி வைக்க வேண்டிய அந்தரங்கங்களை எல்லாம்
வெளிச்சம் போட்டுக் காட்டும் விளம்பரங்கள் 

ஆண்கள் இலகுவில் உணர்ச்சிக்கு அடிமையாகுபவர்கள்
இடம் கிடைத்தால்
மடத்தையே பிடுங்கக் கூடியவர்கள்
பெண்களே உங்கள் பாதுகாப்பு
உங்கள் கைகளில்
பெண்களைப் பாதுகாப்பது
அரசாங்கத்தின் கடமையும் ஆகும்

« Last Edit: May 29, 2016, 02:11:27 PM by thamilan »

Offline MysteRy

மங்கையை நீயும் மரியாதை செய்...

மகளின் வடிவில் மழலை காண்பாய்..
சகோதரி உருவில் பரிவை காண்பாய்..

தோழியின் வடிவில் நட்பை காண்பாய்...
காதலி  உருவில்  கம்பீரம் காண்பாய்..

மனைவியின் வடிவில் அர்ப்பணிப்பை காண்பாய்..
தாய் உருவில் கடவுளை காண்பாய்..
பாட்டி பாசத்தில் ஆசிர்வாதம் பெறுவாய்..



கடினமாய் சிலநேரத்தில் இருந்தாலும்
     கரிசனமாய் பலநேரத்தில் அவள்..

குறும்பானவள் ...
அழகே உருவானவள்..
உன் வாழ்வில் எங்கும் அவள்..வாழ்வே அவள்..


பெண்மையை காப்போம்..பெண்ணியம் போற்றுவோம்..

Offline BreeZe



பெண் என்பவள்
சமூக வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம்
மனித உடலில்
இதயத்துக்கு ஒப்பானவள் பெண்
பெண் இல்லையேல்
வீடும் நாடும் இயங்காது
பெண் இல்லையேல்
மலர்களற்ற நந்தவனம் போலாகிவிடும்
மனித வாழ்வு
பெண் என்பவள்
இயங்கும் சக்தியாகவும்
இயக்கும்  சக்தியாகவும் இருப்பவள்

கல்வியிலும், தொழில் துறையிலும்,
பொருளாதார சூழலிலும், வாழ்க்கைத் தரத்திலும்
 வளர்வதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும்
 நாம் வாழும் இந்த நாட்டில் தான்
வருடம் தோறும் சுமார் இருபதாயிரம்
இளம் பெண்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.
ஏன் இந்த அவலம்


பெண் என்பவள்
போகப் பொருள் ஆண்களுக்கு
ஆண்களே நீங்கள்
மனிதர்களா ? மிருகங்களா ?
உங்கள் காம வெறி
பச்சிளம் குழந்தையை
கூட விட்டு வைக்கவில்லையே !!



பெண்களாய் பிறப்பது தவறா
தாயாய் சகோதரியாய்
மனைவியாய் மகளாய்
பெண் இல்லாமல் ஒரு உறவா 
ஆண்களின்  காம வெறிக்கு
பெண்கள் என்ன உணவா !!
பெண்மை என்றாலே மலிவா !!

ஆண்களின்  மன நோய்க்கு மது !!
காம நோய்க்கு மாது !!
இவை தான் ஆண்மை என்றால்
நீ மனிதனல்ல மிருகம்
மிருகம் கூட தன் இனத்தைத் தவிர
வேறு இனத்திடம் சுகம் தேடாது




பதிப்புரிமை
BreeZe

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
பெண்...!!!
  பெண் பொறுமைக்கு
இலக்கனமானவள் ...!!!
   பெண் அன்பின்
திருவடிவமானவள் ...!!!
   பெண்  ஒரு பிறப்பில்
 மறுபிறவி எடுப்பவள்...!!!
   பெண் யாதுமானவள் ..!!!
 
  பெண்ணானவள் தன்னை
     தினமும் போற்று என்று
 கேட்கவில்லை ...
  தினமும் மரியாதையுடன்
    வழிநடத்து என்கிறாள் ...!!!
 பெண்ணானவள்
    தங்க மாளிகை 
 கேட்கவில்லை...!!!
   அவள் வசிப்பதற்கு ஒரு
 பாதுகாப்பான வசிப்பிடம்
   எதிர்ப்பார்கிறாள்...!!!

 கருவறையில் இருந்து
    இறங்கி கல்லறை செல்லும்
 தூரம்தான் வாழ்கை என்பார் ...!!!
  இடைப்பட்ட தூர பயணத்தில்
    பெண்ணானவள்
அனுபவிக்கும் வேதனையும்
   வலிகளும் சொல்ல
  வாரத்தைகள் என்னற்றவைகள்...!!!
 
    பாரதியார் கண்ட புதுமை
   பெண்ணாக இருக்க
 நினைபவளை ..,
  இந்த சமுதாயம்
முளையில் முடங்க
   வைப்பது ஏனோ ...!!???

 பெண்ணிற்கு காவலாக
   இருக்க வேண்டியவர்கள்
 ஆண்கள் ....!!!
    அவர்களில் சிலர்  காம கொடுரராக
    மாறியது ஏனோ...!!!???
 
  ஒரு பெண்ணை
    நீ தாகத வார்த்தையில்
 வஞ்சிபதற்கு முன்
    ஒரு நொடி சிந்தித்து பார்..,,,
உன்னை 10 மாதம் சுமந்து
    பெற்றடுதவலும்
  ஒரு பெண்தான்  என்பதினை...!!!

   ஒரு சில தவறான
      செயல்களில் இடுப்படும்
  பெண்களால் ...
       இவ்வுலகில் உள்ளல
  அணைத்து பெண்களும் 
     மாசுப்பட்டவர்கள் அல்ல ....!!!

 உன்னை பெற்றடுதவள்
    ஒரு  பெண் ... அம்மா ...!!!
 உன்னுடன் மனமுடிதவள்
   ஒரு பெண் ....மனைவி ...!!!
  உன்னால் உயிர் பெறபோகுபவள்
     ஒரு பெண் ..... மகள் ...!!!
  உன் உடன் பிறந்தவள்
    ஒரு பெண் ....தமக்கை...!!!
 
  பெண்ணின்றி ஒரு
      மனிதனின் வாழ்வில்
  ஆதியும் இல்லை அந்தமும் இல்லை...

  ஒரு பெண்ணை உண்மையாக
       நேசிப்பது இரண்டாம்
    பச்சம் .....
  பெண்களிடம்  மரியாதையுடன்
       நடந்து கொள்வோம்....!!!
 ~ பெண்மையை மதிப்போம் ~
      ~ பெண்களை காப்போம் ~
       
        பெண்மையுடன் ....
  விடைபெறுகிறேன் ...
     என்றும் நட்புடன் ,,,
      ~ !!! ரி தி கா ....!!!~

Offline PaRushNi

பேதை முதல் மங்கையோ  நீ
அரிவையோ  தெரிவையோ 
பேரிளம் பெண்ணோ .,
இந்நிலத்தே அச்சுறுத்தல்களும் அச்சமும்
எவ்வகை ரூபமென்று யூகிப்பதர்கில்லை
பரிணாம வளர்ச்சியில் இன்னும் மனதளவில்
மக்கி போயிருக்கும் மூடர்களின் நெருக்குதல்கள்
எத்தனை எத்தனையோ

பொறுமையின் சிகரம்  என்று பெயர் வாங்கி
இமயமலைக்கு  போட்டி காண ஒன்றுமில்லை
நயமான  சூழ்ச்சிகளை நூதனமாய் முறியடிக்க
நல்ல நட்பின் வட்டத்தை தேர்ந்திடு

விழித்திரு… சீரும் பாம்பு என்று
சொன்னால் சொல்லட்டும்
கொதித்தெழு… கண்காட்சி பொருள் என்று
உன்னை சாடினால்
நயவஞ்சகத்திற்கு சாட்சி ஆகிடாதே
மடமை பேச்சிற்கு செவி சாய்திடாதே
அதை விட மடமையானது ஒன்றுமில்லை

கிறுக்கலுடன்
 பருஷ்ணி :)
« Last Edit: June 01, 2016, 02:08:47 AM by PaRushNi »
Palm Springs commercial photography

Offline Mohamed Azam

பெண் என்பவள் மல்லிகை மொட்டுக்கு
இணையான மென்மை உடையவள்.
அவள்மனதில் தைரியம் சிலநேரங்களில் அலைபாயும்.
 பயம் பல சமையங்களில்  தாண்டவம் ஆடும்.
இவை இரண்டையும் பல இன்னல்களோட
எதிர்கொள்ளவேண்டிய நிலையில் பெண்கள்.

தாய்க்கும் , தங்கைக்கும் , தாரத்திற்கும்
வித்தியாசம் அறியாத  பல பகுத்தறிவில்லாத
ஆண்களால் மிரட்டல்களையும் இன்னல்களையும்
எதிர்கொள்ளும் நிலை.

ஏய் ஆணவத்தால் ஆடும் ஆடவனே
நீ மிரட்டும் பெண் யாரென எண்ணிப்பார்.
நீ வளர்ந்த கருவறை போலவே
மற்றொரு கருவறையை சுமக்கும்
பெண்அவள் என்பதை  உணர மறுக்கிறாயா
அல்லது மறந்து விட்டாயா ?

கண்ணில்லா கயவர் கூட்டமே
கடை தெருவில் பெண்களை கைதட்டி
பரிகாசம் செய்யும் பொழுது
அவளும் ஒரு புனிதம் நிறைந்த
தாயின் தோற்றத்தை கொண்டுள்ளாள்
என்னும் கோணத்தில் உன் விழிகள்
பார்க்க தவறியது ஏனோ ?

பெண்களை மிரட்டும் ஆண்களே
பெண்ணில் பிரசவ வலி எத்தகையது
என்பதை நீ உணர்ந்திருந்தால்
மிரட்டுவதை நிறுத்தி மிரண்டு விடுவாய்.


தங்கத்திலும் தரம் கூடியவள் தாய்
அத்தாயின் வயிற்றில் பிறந்த
நாணங்கெட்ட ஆண்களுக்கும்
நாய்க்கும் வித்தியாசம் இல்லை.

சமுதாயத்தில் இருக்கும் இளைஞர்கள்
இருண்டு போய் கிடப்பதற்கு காரணம் என்ன ?
கண்ணை கட்டிக்கொண்டு காட்டில் வாழ்ந்தாலும்
காரணத்தோடுதான் அவ்வாழ்கையையும் வாழ வேண்டும்.

தொலைபேசிகள் மூலம்  தொல்லைகொடுப்பது
கடை வீதிகளில் மிரட்டுவது
இவைகள்தான் காம கயவர்களுக்கும்,
கள்வர்களுக்கும் தெரிந்த நேர்பாதையா ?

பெண்ணியம் போற்றும் ஆண்களாய் இருப்போம்!
ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் படைப்போம்!
« Last Edit: June 01, 2016, 11:42:28 AM by Mohamed Azam »

கன்னி இவள் கை பேசி
காற்றில் செய்தி சுமந்து வரும்
காலை மாலை அறியாது
காதலையும் கவர்ந்து வரும்

பெண்ணோ ஆயினும்
பெண்ணின் எண்ணோ ஆயினும்
எல்லை இல்லா
தொல்லை ஏனோ?

உடன் பிறப்பாய்
எண்ணிணால்
உடலுறுப்பை தீண்டுவான்

உள்ளந்தந்து பேசினால்
உடலில் காயம்
பாசம் காட்டி பழகினால்
பாம்பின் விஷமோ!

நிழலை துரத்தும்
நாய்கள் இங்கே
நிஜத்தை கண்டால்
நீர் பிரியும்!

பெண்ணே வேண்டாம்
பெண்ணாய் வாழ
உன்னால் முடியும்
ஓர் ஆணாய் மாற


காயா நெருப்பை
கண்ணில் பொருத்து
துரத்தும் மிருகத்தை
தூரத்தில் நிருத்து

தாவணி மாறியது
காதணி மாறியது
கவலை சுமக்கும்
அவலம் எங்கே.?

மாறும் மாறும்
மனிதம் பிறந்தால்
மனிதம் பிறக்கும்
மகளிர் இருந்தால்....

சக்தி