Author Topic: சித்ரா ஹிட்ஸ்  (Read 42414 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #60 on: January 21, 2012, 03:13:32 PM »
படம்: சினேகிதியே
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, சித்ரா



தேவதை வம்சம் நீயோ
தேணிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ

நட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்து
நிலவுன்னை கோலம் போட அழைத்திடும்
நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்
என்னோடு நீயும் ஓட முகில்கள் ஊஞ்சல் போடும்
உலவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைதே போகும்
பகலினில் முழுவதும் வெயிலினிலே
உனை சுட்டு வருத்திய வானம் அது
இரவினில் முழுவதும் அதை எண்ணியே
பனித்துளி சிந்திய அழுகிறது
(தேவதை வம்சம்..)

வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே
சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும்
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே
உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள்
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் உயிருக்கு ஆனந்தங்கள்
பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும்
நீயும் தொட சருகுக்கு உயிர் பிறக்கும்
வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்
(தேவதை வம்சம்..)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #61 on: January 21, 2012, 03:14:13 PM »
படம்: உன்னருகே நானிருந்தால்
இசை: தேவா
பாடியவர்கள்: சித்ரா, கிருஷ்ணராஜ்
வரிகள்: தாமரை




எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்
(எந்தன் உயிரே..)

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னை பார்த்தவுடன்
என்னை தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க
உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அழுகவில்லை

சின்ன சின்ன கூத்து
நீ செய்யிறதை பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ண பாதம்
நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நானிருப்பேன்
கவலைகள் மறக்கவே
கவிதைகள் பிறக்கவே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்
(எந்தன் உயிரே..)

உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை
நிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய்
உன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பார்த்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சத் தாலி மின்ன மின்ன கேளி பண்ண
பக்கத்தில் நான் கிடைப்பேன்

கண்ணில் மீனை வச்சி
புத்தும் புது தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்ல
உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில்
கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்
(எந்தன் உயிரே..)



 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #62 on: January 21, 2012, 03:14:54 PM »
படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, கமல்ஹாசன்
வரிகள்: தாமரை



இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

கால்கள் ரெண்டும் தரையிடம்
கோபம் கொண்ட கலவரம்
மிதந்து மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்கோ
பூமியே துரும்புங்கோ
வானமே தூசுங்கோ
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்கோ

ம்ம்.. தண்டணைகள் இனிக்குது
தவறு செய்ய துடிக்குது
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க சிரிக்க தோணுது

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

என்னை என்ன செய்தாய்
என்னவெல்லாம் செய்தாய்
புத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே
டாக்டருக்கு மருமகனா ஆனேனே

உயிரிலே வெள்ளி ஜரிகையும் கலந்து தான் ஓடுதே
உருவமே தங்க சிலையாய் மாறிதான் போனதே

கால் இருந்த இடத்தில் இப்போ
காற்று வந்து குடி இருக்கு
நடக்கவே தோணலைங்க
மிதக்கத்தான் தோணுதுங்க

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

அடிக்கடி காணும் ரகசிய கனவை
அம்பலமாக்கும் நாள் வர வேண்டும்
சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் ஓஹோ
அந்த நாள் வந்ததே வந்ததே

வானவில்லை காணவில்லை
விடுமுறையில் இங்கே வந்துட்டதே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
செல்ல கொஞ்சி நீங்க அழைக்கும்
நாய்க்குட்டி ஆனேனுங்க

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ



 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #63 on: January 21, 2012, 03:15:30 PM »
படம்: புது பாட்டு
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா




சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் ....... பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

கண்ணேன்னு சொல்ல வேண்டாம் கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரா தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ.....
(சொந்தம் வந்தது..)

பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்
வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்னை சொல்லி
சோரூட்ட நானும் ஒரு தாய் தான்
இரவா பகலா இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா
போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு பொட்டோடுதான் பூவோடு தான்
வாழ்வோம் மாமா நாம்....
(சொந்தம் வந்தது..)

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #64 on: January 21, 2012, 03:16:15 PM »
படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா



மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

(மதுர மரிக்கொழுந்து)

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி

(மதுர மரிக்கொழுந்து)



 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #65 on: January 21, 2012, 03:17:00 PM »
படம்: புதுப்பாட்டு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா



நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து...குளிர் காத்து
கூத்து...என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
இணஞ்சதொரு...கூட்டுத்தான்
பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்
அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்
மாத்தி மாத்தி தரும் மனசு வச்சு மால போட வரும்
பூத்தது பூத்தது பார்வ போர்த்துது போர்த்துது போர்வ
பாத்ததும் தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ

போட்டா...கண போட்டா
கேட்டா...பதில் கேட்டா

வழி காட்டுது...பலசுகம் கூட்டுது...வருகிற…

பாட்டுத்தான்...புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே
பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு
காத்துல கரையுது மூச்சு காவிய மாகிட லாச்சு

பாத்து...வழி பாத்து
சேத்து...ஒன்ன சேத்து
அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது

பாட்டுத்தான்…ஹே ஹே ஹே...புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்... ஹே ஹே ஹே...
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து...குளிர் காத்து
கூத்து...என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது

பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்
பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்



                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #66 on: January 21, 2012, 03:17:40 PM »
படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சித்ரா, மலேசிய வாசுதேவன்



குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி என் வழி தானே மானே
(குடகு மலை..)

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தென்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந் தனியாக நிற்க்கும் தேர் போல ஆனேன்
பூ புத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத ராகம் கொண்டு பாட்டு பாடுது
(குடகு மலை..)

மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நின்னைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நினச்சு தவிச்சேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னால் என்ன
ஒன்னாக நின்னா என்ன
உம் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்னை ந்ண்ணி துடிச்சாலே இந்த கன்னி மாமா
(குடகு மலை..)


 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #67 on: January 21, 2012, 03:18:22 PM »
படம்: இதய தாமரை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா


ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது
ஒன்றானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்
லலலாலலாலலா லாலலலாலா
லலலாலலாலலா லாலலலாலா



 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #68 on: January 21, 2012, 03:18:58 PM »
படம்: பெரிய வீட்டு பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, சித்ரா



நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே நீலக் கருங்குயிலே
தாவணி போல் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து தாவுதடி
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே

ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
கோடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் மாறிடும் பூவினைப் போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன
தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு
சோடியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா?
(சொல்லட்டுமா..)
(நிக்கட்டுமா..)

ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது
என் உள்ளமும் பூத்ததடி
அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மன கோவிலில்
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள் வருமா?
(நிக்கட்டுமா..)



 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #69 on: January 21, 2012, 03:19:51 PM »
படம்: கிழக்கு கரை
இசை: தேவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா



எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்
ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சேன்
ஆசை மாமன் இவன் தானே பாட்டு படிச்சா

யம்மாடியோஓஓஓஒ..
ஓஒ ஓஓ ஓஓ ஓஓ

உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா

ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அணல் மூச்சு வாங்கினாள்

பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு

உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெட்கம் உண்டாச்சு

மயங்காதே மாலை மாத்த
நாளும் வந்தாச்சு

உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

நீ சூட்டும் பூவுக்காக
நெடுந்தூரம் வாடுது
நீ வைத்த பொட்டுக்காக
மடிமொத்தம் வாடுது

ஆத்தாடி உன்னைத்தானே
கண்ணாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலென்று கூறுது

அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட

மையல் விடுநீ மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட

அடங்காது ஆசைகூட
நானும் போராட

உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

ஹ ஹஹ ஹாஆஆ

ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சான்
ஆசை மாமன் தூங்காம தானே பாட்டு படிச்சான்

யம்மாடியோஓஓஓஒ..
ஆஆ..ஆஆ..ஆஆ.

எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #70 on: January 21, 2012, 03:21:35 PM »
படம்: லிட்டில் ஜான்
இசை: பிரவின் மணி
பாடியவர்கள்: க்ளிண்டன், சித்ரா
வரிகள்: வைரமுத்து


பைலாரே பைலா பைலாரே ஹே
பைலாரே பைலா பைலாரே ஹே
பைலாரே பைலா பைலாரே ஹே
பைலாரே பைலா பைலாரே ஹே

பூவுக்கு பொறந்தநாளு
ஒன்னா கன்னி மறந்தநாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவது இங்கிலீஷ் ஆளு
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ள ரகசியமா பாடுவேன்
(கலர் கலரா..)

அல்லாகி பொறந்திருக்கும் பேபியே
உன்ன அழகுல பெத்த அம்மா வாங்குவேன் யேயே..
பேருக்களம் பார்த்த நர்ஸை வாங்குவேன்
நீ பிறந்ததும் பிறந்த இடம் வாங்குவேன்

சிங்கார வாலிபனே.....
சிங்கார வாலிபனே
தீப்பெட்டி சூரியனே
என்ன்னென்ன கற்பனை சொன்னாய்
இங்கிலீஷ்க்கு அப்புறம் நீதானே
(பூவுக்கு பொறந்தநாளு..)

சித்தாரு வீணையெல்லாம் கேட்கல
ஒரு சிற்றெறும்பு பாடும் தமிழ் கேட்குதே
உள்ளூரும் கூடி உன்ன வாழ்த்துமே
நானும் உள்ளூரில் இருந்து உன்ன வாழ்த்துவேன்
தென்மாங்கு ராகத்துல....
தென்மாங்கு ராகத்துல
இங்க்லீஸு பாடுறியே
உன்னோடு தோள போல
உலகம் எல்லாம் இன்பமே
(பூவுக்கு பொறந்தநாளு..)

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #71 on: January 21, 2012, 03:22:18 PM »
படம்: லவ் பேர்ட்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, ஹரிஹரன்



மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
ஆஆஆ....
(மலர்களே..)

மேகம் திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வரவா
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதும் முறையா
நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே நதியே
என் ஸ்வாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா
(மலர்களே..)

பூவில் நாவில் இருந்தால் காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம்மில் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீளம் போலே இணைந்து கொண்டது இந்த உறவே
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உன்னோடு உயிரை போலே புதைந்து போனது தான் உறவே
மறக்காது உன் ராகம் மறிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
(மலர்களே..)


 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #72 on: January 21, 2012, 03:23:48 PM »

படம்: துள்ளாத மனமும் துள்ளும்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா



தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சத்தியமாகவா?
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..)

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த நீரிலே அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கேலி செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
(தொடு தொடு..)


 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #73 on: January 21, 2012, 03:24:32 PM »
படம்: புதுமைப் பித்தன்
பாடியவர்: சித்ரா

ஒன்னு ரெண்டு தொண்ணுத்தெட்டில்
உன்னை சந்தித்தேன்
நான் என்னை சிந்தித்தேன் (2)
நிலவென்று சொல்ல மாட்டேன்
தேய்ந்து விடுவாய்
நிழல் என்று சொல்ல மாட்டேன்
நீங்கி விடுவாய்
உறவென்று சொல்ல மாட்டேன்
விலகி விடுவாய்
உயிர் என்றும் சொல்ல மாட்டேன்
பிரிந்து விடுவாய்
(ஒன்னு ரெண்டு..)

நினைவில் என் நினைவில்
நீங்காமல் நீதான் வாழும் ஓவியம்
மழையில் உன் மழையில்
நான் நனைவது போலே ஏதோ ஞாபகம்
நீ கிடைத்த சேதியில் நெஞ்சம் அலை மோதும்
நான் படுத்து தூங்கவே உந்தன் நிழல் போதும்
வானம் மானம் எல்லாம் இழந்தேன்
உன்னால் தானே மீண்டும் எழுந்தேன்
உன்னு ரெண்டு..
(ஒன்னு ரெண்டு..)

யாரும் அறியாமல்
ஒரு பாலையில் பூ மனம் காதலில் மருகியதே
ஓசை இல்லாமல்
என் ஊணும் உயிரும் ஒன்றாய் உருகியதே
காற்று வீசும் மாலையில்
காத்திருக்க வேண்டும்
கண்ணா எந்தன் காதலை
காதில் பேச வேண்டும்
காட்டும் அன்பில் என்னை மறந்தேன்
உந்தன் மூச்சில் நானும் கரைந்தேன்
(ஒன்னு ரெண்டு..)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #74 on: January 21, 2012, 03:26:14 PM »
படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா



ஓ காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ காற்றும் என்னை ஆதறிக்கவில்லை
கண்ணி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

தேவி வான் சொல்லியா மேகம் வரும்
நீ சொல்லியா காதல் வரும்
தேவா நான் கேட்பது காதல் வரம்
நீ தந்தது கண்ணீர் வரம்
பெண்ணழகு முழுதும் கற்பனை என்று உருகி வாழ்கிறேன்
என்னழகு உனது அற்பணம் என்று எழுதி விடுகிறேன்
போதும் போதும் புன்னகை என்பது காதலின் பல்லவி
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஓ என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒன்றானது
ஓ கள் என்பது பால் ஆனது நான் காணவே நாளானது
என் புடவை உனது கறபனை கேட்டு இடையை மறந்தது
என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஓ காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ காற்றும் உன்னை ஆதறிதததம்மா
கண்ணி வெண்ணிலா கையில் வந்தது
கையில் வந்ததும் காதல் வந்தது
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ