Author Topic: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -15  (Read 457 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

மௌனப்பூட்டிட்டு உள்ளேதானே
உட்கார்ந்திருந்தேன் உள்ளெப்படி நுழைந்தாய்
சுவாசபாசை துணைகொண்டோ -1

குடிகாக்க முடிசூடி
குடிகெடுத்தும் குதூகலமாய் தொடர்கிறது
தமிழகத்தில் குடியாட்சி -2

தலைக்கு தோதீதென விலைபேசி
தலைசீவி வளர்க்கப்படுகின்றது
கொலையெனும் கலை -3

அபிரிதமானதன் ஆட்கொள்ளளினால்
ஆட்கொண்டு அந்தத்தில்
ஆளையே கொன்றது காதல் -4

காதலைத்தானே கசிந்துருகி
காதலாகி காதலித்தேன் இருந்துமேன்
சன்மானமாய் சாதல் -5

மொத்தஏரியில் அத்துமீறிய ஆக்கிரமிப்பை
ஒத்துக்கொள்ளாது பொத்துக்கொண்டு
புறப்பட்டதோ மழைவெள்ளம் -6


காவலாளி எனை
களவாணியாக்கினாய் பின்னங்கழுத்தில்
வெட்கப்பொக்கிசம் புதைத்து -7

உடலிளைக்க நடைநடக்கின்றாய் பூங்காவில்
வழக்கமாறாய் அதிகளவில்
மூச்சிறைக்கின்றன பூமரங்கள் ..-8

பச்சைதேநீர் பருகுகின்றாய்
தீர்த்தமாகிவிடுகின்றது குவளையில்
மிச்சமிருக்கும் எச்சில் தேநீர் -9

பச்சைதேநீர் பருகுகின்றாய்
சுற்றளவு சுருங்குகிறது
கைப்பிடியோடு குவளையும் -10

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
மீண்டும் வாசிக்க தூண்டும் வைர வரிகள்
என்ணம் சிறப்பு...,
Palm Springs commercial photography

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!