Author Topic: ~ வாயுத்தொல்லையா? பூண்டு சூப் குடிங்க! ~  (Read 345 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226727
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாயுத்தொல்லையா? பூண்டு சூப் குடிங்க!



பூண்டை குழம்பில் சேர்த்தாலோ வேறு பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
பூண்டில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன.
கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தைகளின் எடை அதிகரிக்கும்.
இதில் சூப் வைத்தால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள்.
இதோ பூண்டு சூப்,

தேவையான பொருட்கள்

பூண்டுப் பற்கள் – 6
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 சிறியது
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி இலை – சிறிது
புதினா – சிறிது
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்றவாறு

செய்முறை

• வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
• பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
• ஒருகம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
• ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும்.
• பின்னர் அதில் சுட்ட பூண்டு, 2 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
• பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும்.
• அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
• தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
• கடைசியாக உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலையை சூப்பின் மீது தூவி பருகவும்