அழகான கவிதை நண்பா பிரபா...
கண்ணுக்குத் தெரியாத
முகமூடி ஒன்று
காலம் காலமாக இருந்து வருகிறது
ஒவ்வொருவர் முகத்திலும்...!!
இந்த சுயநல உலகில் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் மட்டுமல்ல நாமும் முகமூடி அணிந்தால் தான் வாழமுடியும் என்ற கருத்தும் இயல்பாகவே நம் வாழ்வியலில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பது நிதர்சனம்.
நேசிப்பவர் உண்மையாய் இருந்தால் போலியில்லா அன்பை நான் தரத்தயார் என்கிறீர்கள், அப்படி இருந்தால் நல்லதுதான். முகமூடி இன்றி இயல்பாய் இருக்க முடியுமோ அதுவே நமக்கான இடமும் கூட...