இந்தியா ஏன் உடைய வேண்டும்! என்னடா இப்படி ஒரு பீடிகையோடு ஆரம்பிக்கிறேனே என்று பார்கிறீர்களா? அதுதான் நான் கொண்டிருக்கும் தேசபதியின் உச்சம். என்ன குழப்பமாக இருக்கிறதா?
என்னடா ஒருபுறம் இந்தியா ஏன் உடைய வேண்டும் என்று பீடிகை போடுகிறேன். மறுபுறம் அதுதான் எனது தேசபக்தியின் உச்சம் என்றும் சொல்கிறேனே என்று குழப்பமாக உள்ளதா? நான் சொன்ன என் தேசபத்தி என்பது எனது தனித்தமிழ் நாட்டின் தேசபக்தி. நான் இந்தியாவுக்கு அந்நியன் என்கிற தேசபக்தி.
இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
1) ஈழத்து பிரச்சனை: தனக்கு சொந்தமான ஒரு மாநிலத்தில் வசிக்கும் ஆறரை கோடி மக்களின் உணர்வுகளை காலில்போட்டு மிதித்து அந்த மக்களின் உறவுகளை ஈழத்திலே கொன்று குவிக்க காரணமாக அமைந்தது. அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்பு பயங்கரவாத படையை அனுப்பி எமது உறவுகளை கொன்று, எம்குல பெண்களை கற்பழித்தது.
2) தமிழக மீனவர்கள் பிரச்சனை: சிங்கள பயங்கரவாத ராணுவம் எமது மீனவர்களை சுட்டு கொல்லவதை வேடிக்கைப்பார்த்தது அதற்க்கு துணை போனது. தனது ஆட்சியின் கீழ் உள்ள ஒரு மாநிலத்தின் மக்களை பாதுகாக்க தவறியது. எம்மீனவர்களை சுட்டுக்கொல்லும்போது எங்கே போனது இந்திய கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படை இவையெல்லாம் சிங்கள பயங்கரவாத படைக்கு விளக்கு பிடிக்கவா? அப்படி கேட்க்க தோன்றுகிறது.
3) காஷ்மீர் பிரச்சனை: இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் காஷ்மீர் மன்னராக ராஜா ஹரி சிங் இருந்தார். காஷ்மீர் தனிநாடாக விளங்கியது. பின்னர் பாகிஸ்தான் காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதால் அதை தன்னோடு இணைத்துக்கொள்ள திட்டமிட்டது. பயந்து போன ராஜா ஹரி சிங் இந்தியாவிடம் உதவிகோரினார். இந்திய படைகள் காஷ்மீர் போனது இதில் இந்திய கைவசம் வந்த பகுதி ஜம்மு காஷ்மீர் என்றும் பாகிஸ்தான் கைவசம் போன பகுதி ஆசாத் காஷ்மீர் என்றும் ஆகிப்போனது.
தனக்கு சொந்தம் இல்லாத ஒரு நாட்டின் மீது உரிமை கொண்டாடி பல லட்சம் கோடிகளை செலவிட்டு மக்களின் வரிபணத்தை விரயம் செய்து வருகிறது இந்தியா. இந்திய ராணுவத்தில் பெரும்பகுதி காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டும், காஷ்மீர் பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்திய வெறியாட்டத்தை எழுத பக்கங்கள் போதாது.
4) சத்தீஸ்கர் பழங்குடி மக்கள் பிரச்சனையை: அந்நிய முதலாளிகளுக்கு பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கனிம வளங்களை தாரைவார்த்து கொடுக்க அந்த மக்கள் மேல் ராணுவத்தை பயன்படுத்தி ஒரு போரை நடத்தி வருகிறது இந்தியா. நாட்டின் குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் போர். அவதார் படத்தை பார்த்து வாய்பிளக்கும் நாம் இதே கொடுமைதான் இந்திய அரசால் சத்திஷ்கர் பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்பதை மறந்து போனோம்.
5) போபால் விசவாய்வு தாக்குதல்: போபால் விசவாய்வு கசிவால் பல்லாயிரக்கணக்கில் மக்கள் மடிந்ததும் அந்த மக்களுக்கு இன்றுவரை நீதி மறுக்கப்பட்டு வருவதும் அவர்களுக்கு உண்டான நஷ்டஈடு இன்றுவரை சரிவர வழங்க படாததும்மான தொடரும் அநீதிகள். இதில் முக்கிய குற்றவாளியான் அமெரிக்காவை சேர்ந்த அன்ருசன் தப்பி செல்ல வழிவகை செய்ததும் கொடுமையோ கொடுமை.
6) பாபர் மசூதி இடிப்பு: ஒரு மதசார்பற்ற நாட்டில் சிறுபான்மை மதத்தின் வழிபாட்டு தளத்தை பெரும்பான்மை மதத்தை சேர்ந்த மதவெறியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு இருக்குபோதே உடைத்து நொறுக்குவதும் ஆன வினோதம். அதை வேடிக்கைபார்த்து கொண்டிருந்த ஒரு நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, மற்றும் மத்திய, மாநில அரசுகளும் துணை ராணுவமும் இந்த கொடுமை எந்தநாட்டிலும் நடக்காதது. ஒரு நாட்டின் பிரதமரை பாதிப்புக்கு உள்ளான மக்கள் தொடர்பு கொள்ள முடியாதபடி பிரதமர் ஒளிந்து கொண்டதும் உலகில் எங்கும் காண முடியாத அற்புதங்கள்.
7) குஜராத் இனப்படுகொலை: நாட்டின் ஒரு பகுதியில் கலவரம் என்கிற பெயரில் ஒரு இரத்த வெறியாட்டம் நத்தப்படுகிறது அதை தடுக்க வழியில்லாமல் வேடிக்கை பார்க்கிறது மத்திய நடுவண் அரசும், அதன் நுண்ணறிவு பிரிவான உளவுத்துறையும். பல்லாயிரக்கணக்கில் மக்கள் எரித்தும், வெட்டியும், கொல்லப்பட்ட அவலம் அதை தடுக்க துப்பில்லாத ஒரு நாடு.
சொந்த நாட்டின் குடிமக்களை பாதுக்காக்க துப்பில்லாத ஒரு நாடு. அந்நிய நாடுகளின் விவகாரங்களில் தலையிடுகிறது. இலங்கை தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டு வேறு வழியே இல்லாமல் ஒரு ஆயுத போராட்டத்தை துவங்கி அதன் மூலம் ஒரு நாட்டையும் அமைக்கிறார்கள் இதை பொறுக்காத இந்தியா அந்த போராட்டத்தை நசுக்க ஆயுதஉதவி செய்கிறது. சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க துப்பில்லை இதில் அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையீடு வேறு.
நாடு என்பது அதில் வசிக்கும் மக்களின் நலன்களுக்காகத்தான். மக்களின் நலன்களை கொன்று, மக்களை கொன்று ஒரு நாடு வளர்கிறேன் பேர்வழி என்று சொன்னால் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிய நாடக வைத்து அதை ஆட்சி பண்ண முடியாத போது அது பிரிந்து, உடைந்து போடுவதே சாலச்சிறந்தது.
குடிமக்களுக்கு எதிராக போரும், குடிமக்களை பாதுகாக்க முடியாத நிலையும், அடுக்கடுக்கான துரோகங்களையும், கீழறுப்பு வேலை களையும் செய்வதற்கு என்று ஒரு நாடு தேவையா? என்பதே சராசரி மனிதனுக்குள் எழும் கேள்வி. அதற்க்கு பதிலாக அது உடைந்து சிறு அரசுகள் தோன்றினால் போதுமே. சும்மா மனித நேயத்தை கொன்று புதைத்து விட்டு போலி தேசபக்தி முகமூடிதான் போடுவேன் என்று சொல்பவர்கள் சிந்திக்கவும்.
நட்புடன் : மலர்விழி.