Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை! ~ (Read 526 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226754
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை! ~
«
on:
February 06, 2016, 12:05:45 PM »
மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை!
வெப்பப் பிரதேசங்களில் புதர்ச் செடிபோல வளரக்கூடியது துத்திக்கீரை. இதன் கீரை மட்டும் அல்ல, வேர், பட்டை, விதை, பூ என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.
துத்திக்கீரையை பருப்புடன் சேர்த்து வேகவைத்து, கடைந்து சாப்பிடலாம்; துவையலாகவும் செய்து சாப்பிடலாம். உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் நோய்கள் நீங்கும்.
மூலம், உடலில் ஏற்படும் கட்டி, புண்கள் குணமடையும்.
துத்தி இலைகளைக் குடிநீர் செய்து, பாலும் சர்க்கரையும் சேர்த்துக் கலந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்போக்கை (கழிச்சலை) ஏற்படுத்தி, மூலக்கடுப்பு, உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
துத்தி இலைச் சாறு 25 மி.லி எடுத்து, அதில் பாதி அளவுக்கு நெய் சேர்த்துக் கலக்கி உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் கழிச்சல் குணமாகும்.
துத்தி இலையுடன் ஆமணக்கு நெய் (விளக்கெண்ணெய்) விட்டு வதக்கி எடுத்து, மூலத்தால் ஏற்பட்ட கட்டிகள், புண்கள் ஆகியவற்றின் மீது கட்டுப்போட புண்கள் நீங்கும்.
துத்திக்கீரையை சாறு எடுத்து, பச்சரிசி மாவு சேர்த்து களிபோல நன்றாகக் கிண்டி, உடலில் உள்ள கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.
துத்தி இலையைக் குடிநீர் செய்து, வாய் கொப்பளிக்க, பல் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
துத்தி இலையைத் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, கெட்டியான துணியைத் தோய்துப் பிழிந்து, உடலில் வீக்கம் ஏற்பட்ட இடங்களில் ஒத்தடம் கொடுக்க, வலி நீங்கும்; வீக்கம் குறையும்.
துத்தி இலையைக் குடிநீர் செய்து, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, ஆறவைத்து கண்களைக் கழுவினால், கண் நோய்கள் நீங்கும்; பார்வை தெளிவாகும். துத்திக் குடிநீரைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் சிறிதளவு பருகி வந்தால், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்கள் கரையும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை! ~