இத்தளத்தில் பெருஞ்சித்திரனார் ஞாபகப்படுத்தி விட்டதிற்கு நன்றி நண்பா...
இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், பிரபாகரன் அவர்களின் போராட்டத்திலும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர்.
பெருஞ்சித்திரனார் 20 ம் நூற்றாண்டு தமிழ் அறிஞர் ஆவார். தமிழ்தேசிய தந்தையாக தமிழர்களால் போற்றப்படுகிறார். தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றால் தென்மொழி என்ற இதழை நடத்திவந்தார். தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்தி வந்தார்
“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய மால்முதல் உயிர்மொழி”
என்று தமிழின் பெருமையைப் போற்றுகிறார் பெருஞ்சித்திரனார்.
“தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி” என்பார் பாவாணர்.
இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் ‘பாவலரேறு தமிழ்க்களம்’ என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
பெருஞ்சித்திரனாரின் பாதையே தமிழக விடுதலைக்கான பாதை. அதைத் தொடர்வதே இப்போதைக்கு அனைவருக்கும் அவசியத் தேவை.