Author Topic: ~ சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் கொத்தவரை ~  (Read 490 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் கொத்தவரை



பரம்பரை மருத்துவமான இந்திய மருத்துவங்களாக சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் கொத்தவரைக்கு ஓர் பங்கு உண்டு. கொத்தவரையின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து தீ நீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய் தணிகிறது.

கொத்தவரை இலைகள் கைப்பிடி எடுத்து அதனுடன் சிறிது கறிவேப்பிலை, மஞ்சள் கரிகலாங்கண்ணி ஆகிய இலைகளைச் சேர்த்து தீ நீராக்கிக் குடிப்பதால் இரவு நேரக் கண்பார்வைக் குறைபாடு (நைட் பிளைண்ட்) விரைவில் நீக்கப்பெறுகிறது. கொத்தவரை விதைகளைச் சேகரித்து சுமார் பத்து கிராம் அளவு எடுத்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குடிப்பதால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள், வலிகள் விரைவில் குறைந்து நிம்மதி ஏற்படுகிறது.
கொத்தவரை சமூத்தை இலை, காய், விதை, வேர் ஆகியவற்றை சேர்த்து கைப்பிடி அளவு எடுத்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து இனிப்போ, உவர்ப்போ சேர்த்துக் குடித்து வருவதால் உடலில் தங்கிய பித்த கப தோஷங்களை வெளியேற்றி உடலுக்கு நல்ல சுறுசுறுப்பையும், விரைவான இயக்கத்தையும் தருவதாக உள்ளது.
கொத்தவரை மிகவும் சுவையான ஓர் கறிக்கு உதவும் காய் என்பதை நாம் அறிந்திருந்தோம். ஆனால் கொத்தவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீர்பெறுகிறது. இதய அடைப்பு தடைபடுகிறது. சர்க்கரை நோய் தணிகிறது. ரத்தஅழுத்தம் குறைகிறது. உணவுப் பாதை மற்றும் ஆசன வாய்ப்புற்று நோய் தவிக்கப்படுகிறது.