« Reply #1 on: November 04, 2015, 11:05:25 PM »
சத்துமாவுதேவையானவை:
அரிசி, கோதுமை, கம்பு, ராகி, பாசிப்பயறு, பொட்டுக்கடலை - தலா 100 கிராம்
வறுத்த வேர்க்கடலை -
50 கிராம்
முந்திரி, பாதாம் - தலா 5
ஏலக்காய் - 2

செய்முறை:
அரிசி, கோதுமை, கம்பு, ராகி, பாசிப்பயறு, பொட்டுக்கடலை ஆகியவற்றை எல்லாம் நன்கு சுத்தம் செய்து, ஒன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் இரண்டு மடங்குத் தண்ணீர் சேர்த்து, 8 மணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடித்து, சுத்தமான ஈரத்துணியில் சுற்றி ஒர் இரவு முழுவதும் ஓரிடத்தில் கட்டித் தொங்கவிடவும். மறுநாள் தானியம் முளைவிட்டிருக்கும்். அவற்றை அகலமான தட்டில் பரப்பி வெயிலில் நான்கு நாட்கள் காயவைக்கவும். பின்னர், அவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும். இதை மாவாக அரைத்து, நன்கு சலித்து, சத்துமாவாகப் பயன்படுத்தலாம். அரைத்த மாவைக் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்துவைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது.
« Last Edit: November 04, 2015, 11:18:06 PM by MysteRy »

Logged