Author Topic: ~ சில மூலிகை குறிப்புகள்...ஹெல்த் ஸ்பெஷல்! ~  (Read 441 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226800
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சில மூலிகை குறிப்புகள்...ஹெல்த் ஸ்பெஷல்!



எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய மூலிகை செடிகள் இருக்கிறது. நாங்கள் ஏதாவது ஒன்று என்றால் உடனே டாக்டரிடம் போகமாட்டோம். முடிந்தவரை எல்லாவற்றிற்கும் அந்த மூலிகையைத் தான் பயன்படுத்துவோம். எனக்கு தெரிந்த சில வியாதிகளுக்கு சில மூலிகை குறிப்புகளைச் சொல்கிறேன் அதை நீங்களும் இனி பயன்படுத்திக் கொள்ளலாம். எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும். நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும். குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும். உடல் வலிமை பெற : அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும். அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும். மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும். இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும். சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும். படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும். நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நேரம் குணமாகும். கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும். அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும். அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும். முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும். தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும். தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும். முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும். சிறுகீரை: நீர்கோவை குணமாகும். வெந்தியக்கீரை: இருமல் குணமாகும் புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும். அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.